Loading

Friday, August 12, 2011

அண்ணா ஹசாரேவின் சொதப்பல்கள் !


பல ஊழல்கள் ,,கருப்பு பண விவகாரத்திற்கு, எதிராக நாடே சலிப்படைந்திருந்த போது,சமூக சேவகர் ,அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து ,அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் !

அப்படிப்பட்ட அண்ணா ஹசாரேவின் இன்றைய நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை .அண்ணா ஹசாரே குழு தயாரித்த அறிக்கையை அரசு ஏற்காமல் ,தானாக ஒரு லோக்பால் வரைவுச் சட்டத்தை முன் வைத்தது ! அண்ணா ஹாசாரே முதலில் முரண்டு பிடித்து ,,சிறிய திருத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர் !

பின்பு ,இதை ஏற்க மறுத்த அண்ணா ஹசாரே ,மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார் ..மீண்டும் இரு தரப்புக்கும் இழுபறி ,இதனிடையே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் ,எந்தப் பலனும் ,,பதிலும் கிடைக்கவில்லை !

பின் நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ,லோக்பால் அறிக்கையின் நகலை ,பொது இடத்தில் கூடி எரித்தார்கள் ,பின் சோனியாவுக்கு ,,காங்கிரசின் உறுப்பினர்களை பற்றி குறை சொல்லி கடிதம் எழுதினார் !

எங்கள் குழுவின் அறிக்கை ஏற்கவில்லை என்றால் ,,ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார் ,,பின் காலவரையற்ற உண்ணாவிரதம் என்றார் !இன்று காலை ,,மூன்று நாட்களுக்கு மட்டும் உண்ணாவிரதம் என்கிறார் ,,எந்த இடத்திலும் தான் உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார் ..ஒரு நேரத்தில் ,அரசின் பேச்சை கேட்க முடியாது என்றார் ,பின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்கிறார் !

முன்பு நரேந்திர மோடியை புகழ்ந்தார் ,,எதிர்ப்பு வரவே ,,அவரை உதறிவிட்டு ,சோனியாவை புகழ்ந்தார் ,,!! மன்மோகன் நல்லவர் ,ரிமோட் தான் சரியில்லை என்றார் !வர ,வர , அரசியல்வாதிகள் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் போல ...நம்ம ராமதாசே இவரிடம்  தோற்றுவிடுவார் !!

பலே பலே ,,நடத்துங்க அண்ணா ஹசாரே !!

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்