Loading

Thursday, November 10, 2011

முதலெழுத்து !

எனது

கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில்

உன் பெயரின் முதலெழுத்தை

சேர்க்காமல் இருப்பதில்லை.

எதற்காக சேர்த்தேன் ?

நீ என்னை காதலித்த
நன்றிக் கடனுக்காகவா ?

என்னுள் கிடத்திச்சென்ற
உன் நினைவுகளுக்காகவா ?

என் விரல்களி எச்சில் அப்பிய
உன் இனிய முத்தத்திற்காகவா ?

எப்படியோ,

எனது கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில் ,

உன் பெயரின் முதலெழுத்தை.........
.
.
.
.

.
.
மன்னிக்கவும் ,

உன்னுடன் சேர்த்து

காயத்ரி ,திவ்யா ,ராஜினி....

இவர்களுடைய பெயரின் முதலெழுத்தையும்

என் வார்த்தைகளில் சேர்க்காமல் இருப்பதில்லை !

4 comments:

  1. Super a irukku. en manathil etho oru santhosaththai erpaduthivittathu
    intha kavithai

    ReplyDelete
  2. @masanam அவர்களே மிக்க நன்றி :-))

    ReplyDelete
  3. அருமையான வரிக் கோர்ப்புகள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    ReplyDelete
  4. மிக்க நன்றி சகோ

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்