Loading

Saturday, December 3, 2011

அபோகலிப்டோ (சினிமா 2006)

நான் பார்த்த திரைப்படங்களில் , என் மனதை கொள்ளைகொண்ட படங்களின் வரிசையில் அபோகலிப்டோ திரைப்படம் முக்கிய அங்கம் வகிக்கிறது ..மெல்கிப்சன் இயக்கிய இந்த ஆக்சன் கலந்த வரலாற்றுப் படம் ,பார்த்த அனைவரையும் வியக்கவைக்குமென்றால் அது மிகையல்ல !

அபோகலிப்டோ !பதினாறாம் நூற்றாண்டில் கதை ஆரம்பிக்கிறது .

பழங்குடி மக்களில் ,ஒரு குழுவினர் ,மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் ..உணவை வேட்டையாடி ,தன் குடும்பத்திற்கு கொடுப்பது என்று வளமையாக சென்றுகொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ,மற்றொரு அரக்க குணம் படைத்த பழங்குடி இனம் இந்த மக்களை வேட்டையாடுகிறது !அவர்களின் வாழ்விடங்களை தீ வைத்து , பெண்களை சூறையாடி ,ஆண்களை அடிமைப்படுதுகிறார்கள் .இந்த நேரத்தில்,
கதையின் நாயகன் ,தன் கர்ப்பிணி மனைவியையும் ,பையனையும் காப்பாற்ற எண்ணி ,அவர்களை பெரிய பள்ளத்தில் இறக்கிவிடுகிறார் .எல்லாரையும் அடிமைப்படுத்திய எதிரி கும்பல் ,நாயகனின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார்கள் ..பிடிபட்ட மக்களை கயிற்றால் கட்டி இழுத்துச்செல்கிறார்கள். .கைகள் கட்டப்பட்ட நாயகன் தன் மனைவி இருக்கும் இடத்தை பார்க்க ,சந்தேகப்பட்ட எதிரிப்படைவீரன் ஒருவன் , மரத்தில் கட்டப்பட்ட கயிறை வெட்டிவிடுகிறான்.
 
அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ,எதிரிப்படையின் முகாமுக்கு இழுத்துச் செல்கிறார்கள் ,பெண்களை ஏலத்தில் விட்டுவிட்டு ஆண்மக்களை ,கடவுள் பெயரில் பலியிடுகிறார்கள் .நாயகனை பலி கொடுக்குப்போகும்  நேரத்தில் .சூரியன் மறைய ,கடவுள் திருப்தியடைந்தாரென எண்ணி  ,நாயகனுடன் iசேர்த்து மற்ற அடிமைகளையும் அப்புறப்படுத்துகிறார்கள். அங்கிருந்து ஒரு மைதானத்தில் ,அடிமைகளை ஓடவிட்டு வேட்டையாடுகிறார்கள் .அதிலிருந்து தப்பிக்கும் நாயகன் ,தான் வாழ்ந்த காட்டுப்பகுதிக்கு ,தன் உயிரைக்காப்பாற்றிகொள்ள   ஓடுகிறார் .
ஆத்திரமடைந்த எதிரிப்படை ,நாயகனை வெறிகொண்டு துரத்துகிறார்கள் ..நாயகன் தப்பித்தானா ? பள்ளத்தில் இறக்கிவிட்ட மனைவி ,மக்களை காப்பாற்றினானா ? எதிரிப்படை என்ன ஆனது ? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ...



இந்த படத்தின் விசேஷம் என்னவென்றால் ,இன்றைய வாழ்வில் ,சிறு சிறு விசயங்களுக்கு கூட அலுத்துக்கொள்ளும் நாம் ,தன் உயிரை காப்பாற்ற ,பலவித துன்பங்களை சகித்துக்கொள்ளும் நாயகன் ,நாயகனின் மனைவிக்கு முன்னால்,நம்முடைய  பிரச்சினையெல்லாம் சாதாரனமென எண்ணத்தோன்றுகிறது.  !

தனி மனித வாழ்க்கை போராட்டத்தை ,இத்தனை சுவாரசயத்துடன் எடுத்த மெல்கிப்சனுக்கு ஒரு சல்யூட் !

4 comments:

  1. படத்தை பார்க்க தூண்டும் நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.
    இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூவுக்கே முதன் முதலாக வருகிறேன் என்று நினைக்கிறேன்..இவ்வளவு நாட்கள் நான் உங்களை எப்படி மிஸ் பண்ணேன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. @kannan avargale ,neenga vanthadhe periya visayam nandri

    ReplyDelete
  3. naan kooda intha maathiri valai poo aarambikkanum enna pannrathu sollunga please

    ReplyDelete
  4. ithai nanum partthullen migavum arumayana padam

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்