Loading

Wednesday, December 28, 2011

முற்றுப் பெறாத முல்லைபெரியாறு பிரச்சினை !


பொதுவாக ,தமிழனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ,அதன் தீர்வுக்கு உடனடியாக எதையும் யோசிக்காமல் தீக்குளிப்பு என்ற கூர்மையில்லாத ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் .இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் ஓரிருவர் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வந்தது .

அதையும் தாண்டி ,.தமிழக மக்கள் அனைவருக்கும் ,இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ,கேரள அரசின் பிடிவாதத்தை வெறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடிந்தது .தினமும் ,சில ,பல போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது .

அணையின் நீர்மட்டத்தை முன்னமே உயர்த்த சொல்லி ,நீதிமன்றம் உத்தரவிட்டும் ,சற்றும் செவி சாய்க்காமல் கேரள அரசு இருந்தபோதே ,நாம் உயிர்ப்புடன் போராடியிருக்க வேண்டும் .அந்த நேரத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை . எந்த ஒரு பிரச்சினையையும் ஆரப் போட்டு செய்வது ,தமிழக அரசின் கொள்கையாகி விட்டது.

முன்பெல்லாம் ,சிவகங்கை ,ராமநாதபுரத்தில் ,முப்போகம் விளைந்தது... அதற்கு மிக முக்கியமான காரணமாய் ,சதுரகிரிமலை தண்ணீரும் ,முல்லைபெரியாறு தண்ணீரும் அதிக பங்களித்து ..கடந்த பத்து ஆண்டுகளாக ,மழையை மட்டுமே நம்பி  ,இந்த மாவட்டங்கள் விவசாயம் செய்கிறார்கள் .இதை கேட்க ஒரு நாதியும் இல்லை .
அரசியல் தலைவர்களும் ,கடமைக்கு மத்திய அரசை கண்டித்து கடமையை முடித்துக் கொள்கிறது

 நம் பங்குக்கு நாமும் ...எங்கோ ஒரு கடற்கரையில் ,கூட்டத்தை நடத்திவிட்டு ,பிரச்சினையை ஆரப்போடுவதுதான் ..கண்ணுக்கெட்டிய தூரம்வரை சிறந்த ? வழியாக தெரிகிறது!

1 comment:

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்