Loading

Tuesday, November 20, 2012

ஒரு கொலை (பல திருப்பங்கள் )


புதிதாக திருமணம் செய்துகொண்ட இந்திய இளம் தம்பதி ஹனிமூனுக்கு தென்னாபிரிக்கா சென்றபோது, அவர்கள் பயணம் செய்த கார் கடத்தப்பட்டு, கணவன் வெளியே தூக்கி எறியப்பட்டபின் மனைவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
தென்னாபிரிக்கர் ஒருவர், இந்த இந்திய இளம் பெண்ணை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது தென்னாபிரிக்க கோர்ட். கொலையாளிக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கில் ஒரு ட்விஸ்ட்.
இந்த கொலையை ஏற்பாடு செய்ததே, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர்தான் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அதாவது, கார் கடத்தப்பட்டது, கணவர் தூக்கி வெளியே எறியப்பட்டது எல்லாம் செட்டப். கொலை செய்த நபர், வாடகை கொலையாளி!
சினிமா போல உள்ளதா? ஆனால் நிஜம். ஒவ்வொரு போட்டோவாக பார்த்து வாருங்கள். சுவாரசியமாக இருக்கும். கீழேயுள்ள போட்டோவில் உள்ள பெண்தான் கொல்லப்பட்டவர். பெயர், ஆனி தீவானி. 28 வயது.




ஆனி தீவானி, இந்தியாவில் இருந்து சுவீடன் நாட்டில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர். ஆண், ஷ்ரியென் தீவானி. 30 வயதான இவர், பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். கீழேயுள்ள போட்டோ, அவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து சில தினங்களில் ஹனிமூன் சென்றபோதே, ஆனி தீவானி கொல்லப்பட்டார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இவர்கள், வாடகை கார் ஒன்றில் ஏறி, தென்னாபிரிக்காவின் குகுலிது என்ற இடத்துக்கு சென்றனர். இந்த இடம் கொஞ்சம் அடாவடியான இடம். திடீரென இருவர் காரை மறிக்க, கார் நின்றது, காருக்குள் துப்பாக்கியுடன் ஏறிய இருவரும், காரை கடத்திச் சென்றனர்.
சிறிது தொலைவு சென்றதும், கணவனை வெளியே தூக்கி எறிந்துவிட்டு, மனைவியை மட்டும் காரில் கொண்டுபோய் சற்று தொலைவில் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர் கடத்தியவர்கள்.




கொலை நடந்து 3 தினங்களின் பின் கணவன் தீவானி கிளம்பி பிரிட்டன் சென்றுவிட்டார். அதன்பின் தென்னாபிரிக்க போலீஸ் கடத்தல்காரர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரது பெயர், ஸோலி மெங்கெனி.

ஸோலி மெங்கெனியை விசாரணை செய்தபோது, அவருடன் இந்த கடத்தலுக்கு வந்த கூட்டாளி யார் என்பது தெரிந்தது. குவாபே என்ற பெயருடைய அந்த நபரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் விசாரித்தபோது, ஹனிமூன் தம்பதியை காரில் அழைத்துச் சென்ற டிரைவரும் இதில் உடந்தை என்று தெரிந்தது. (அதுதான், இவர்கள் காரை மறித்தபோது, டிரைவர் காரை நிறுத்தினார்) இதையடுத்து டிரைவர் ஸோலா டொங்கோ என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டிரைவரை விசாரித்தபோது அவர் கூறியதுதான், அதிரடி திருப்பம்.
“ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய ஹனிமூன் தம்பதிகளை பிக்கப் பண்ணி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் சந்தோஷமாக இருப்பது போலவே காணப்பட்டார்கள்.  ஆனால், கணவன் என்னுடன் தனியாக டீல் ஒன்றை பேசினார்.
15,000 ரான்ட் (சுமார் 2,000 டாலர்) பணம் கொடுக்கிறேன். என் மனைவியை கொலை செய்ய வாடகை கொலையாளி ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றார் அவர். அதுதான், ஸோலி மெங்கெனியை ஏற்பாடு செய்தேன்” என்றார் இந்த டாக்சி டிரைவர்.

இந்த விபரம், தென்னாபிரிக்காவால், பிரிட்டிஷ் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. தென்னாபிரிக்கா கோர்ட் பிறப்பித்த வாரண்டில், கணவன் தீவானி பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட தீவானி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். தென்னாபிரிக்கா அரசு, வழக்கு விசாரணைக்காக இவரை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தீவானியின் வக்கீல், இவரை அங்கே அனுப்ப கூடாது என்று வாதிட்டார்.
இதற்கிடையே, தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் குவாபே, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். கொலைக்கு உடந்தையாக இருந்தது, துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது.
“நான் கொலை செய்யவில்லை. எனது கையில் துப்பாக்கியும் இருக்கவில்லை” என்றார் அவர். அதையடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைவாசம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே பிரிட்டனில், மற்றொரு திருப்பம். கணவன் தீவானி தென்னாபிரிக்காவுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை ஏற்பட்டவுடன், அவர் தரப்பு மற்றொரு விஷயத்தை வெளியிட்டது. அது என்னவென்றால், இந்த தீவானி லேசாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது.
இதையடுத்து அவர், பிரிஸ்டலில் உள்ள மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனின் Mental Health Act at Fromeside Clinic நடைமுறைப்படி, இவர்மனநோய் மருத்துவ மனையில் பலத்த காவலுடன் தடுத்து வைக்கப்பட்டார். கீழேயுள்ள போட்டோவில், தீவானியின் தற்போதைய தோற்றம், அவரது திருமணத் தோற்றத்தில் இருந்து எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதை பாருங்கள்.


இதற்கிடையே தீவானியை தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது. பிரிட்டிஷ் உட்துறை செயலாளர் தெரசா மே, தீவானியை தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது என்ற உத்தரவில் கையெழுத்து இட்டார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், “இந்த குற்றம் முழுமையாக தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என்பதுதான்.
தற்போது சிகிச்சை பெற்றுவரும் தீவானி, குணமடைந்தவுடன் தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.


நன்றி :விறுவிறுப்பு.காம் 

Friday, November 2, 2012

FORREST GUMP (மிகச்சிறந்த ஹாலிவுட் திரைக்காவியம் )




இன்று, வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்வதற்கு இங்கே எத்தனை பேர் தயாராய் இருப்பார்கள் ?
அப்படி நாம் தயாராக இருந்தாலும்,நம்முடைய குடும்ப வட்டம்,நம்மை அப்படி வாழ அனுமாதிப்பார்களா ?
உங்கள் நண்பர்களின் வருங்காலக் கனவுகளுக்கு ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?
இல்லை வாழ்க்கையில் பல அடிகள் வாங்கிய முன்னாள்  காதலியை எந்தவித சங்கோஜம் இல்லாமல் ஏற்று இருக்கிறீர்களா  ?
ஒருக்கால்
இவைகள் அனைத்தையும்  நம் மனநிலை செய்ய அனுமதித்தாலும்,நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை நம்மை  ஒருபோதும் செய்ய
அனுமதிப்பதில்லை.இந்தப் படத்தின் கதாநாயகன்(FORREST) எந்தவித குழப்பமும் இல்லாமல் எப்படி பல விசயங்களை
கடக்கிறான் என்பதை ஃபாரஸ்ட்கம்ப் திரைப்படம் நமக்கு மிகஇயல்பாக புரியவைக்கிறது.
மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பட வரிசைகளில் "ஃபாரஸ்ட் கம்ப்" மிக முக்கிய இடம் வகிக்கிறது.




சரி ஃபாரஸ்ட்கம்ப் திரைப்படத்தின் திரைக்கதையை பார்க்கலாம்.

ஃபாரஸ்ட் கம்ப் (நாயகனின் பெயர்')பேருந்திற்காக பஸ்ஸ்டாப்பில் காத்திருக்கிறார்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒரு
பெண்மணியிடம் பேச்சுவாக்கில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார்.
ஃபாரஸ்ட் தன்னுடைய இளவயதில் இயல்பாக நடக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.. இதனால் சிறுவன் ஃபாரஸ்டை
வழமையான ஸ்கூலில் சேர்க்க அவரின் அம்மா தன்னையே பள்ளி மேலாளரிடம் கொடுத்துத்தான் சேர்க்க
முடிகிறது. முதலில் ஃபாரஸ்ட்டுக்கு யாருமே பள்ளி வாகனத்தில் அமர இடம்தர மறுக்கிறார்கள்.பின் ஜென்னி என்ற
சிறுமி இடம் தருகிறாள்.அதன் பின் ஜென்னியும்,ஃபாரஸ்ட்டும் சிறந்த நண்பர்களாகிறார்கள்.
ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் ஃபாரஸ்ட்'டை கல்லால் அடிக்கிறார்கள்,இதைப் பார்த்த ஜென்னி  ஃபாரஸ்ட்டை
ஓடச்சொல்கிறாள்.ஒழுங்காக நடக்கமுடியாத ஃபாரஸ்ட் ,காலை இழுத்துக்கொண்டே ஓடமுயற்சிக்கிறான்,
பின் மெதுமெதுவாக வேகத்தை கூட்டி தன்னால் மற்றவர்களைப் போல ஓடமுடியும் என்பதை
உணர்கிறான்.

ஃபாரஸ்ட்டின் கதையை கேட்டுக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு பேருந்து வந்துவிட அவர் கிளம்பிவிடுகிறார்.பின்
மற்றொருவரிடம் கதையை தொடர்கிறான் நாயகன் ஃபாரஸ்ட்.




பள்ளிக்காலம் முடிந்து ஃபாரஸ்ட்டும் ,ஜென்னியும் கல்லூரிக்கு செல்கிறார்கள்.இப்போதும் ஃபாரஸ்ட்டை சில 
இளைஞர்கள் கல்லால் அடிக்க முற்பட,ஜென்னி ஃபாரஸ்ட்டை ஓடச்சொல்கிறாள்.ஃபாரஸ்ட்டும் ஓடத்துவங்குகிறான்.
பல தூரம் ஓடி,ரக்பி விளையாடும் மைதானத்திற்குள் ஓடுகிறான்,அவனின் ஓட்டத்தை கவனிக்கும்
ரக்பி கோச், ஃபாரஸ்டை  விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறார்.அதிலும் ஃபாரஸ்ட் கல்லூரிக்காலம் முழுவதும் 
ஜொலிக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடித்த ஃபாரஸ்ட்டுக்கு ராணுவத்தில் சேர அழைப்பு.ராணுவ முகாமுக்கு செல்கிறான்.ராணுவ வண்டியிலும் 
ஃபாரஸ்ட்டுக்கு இடம் தர மறுக்கிறார்கள்,பின் ஒருவர் இடம்தருகிறார்.அவர் பெயர் பாபா.இருவரும் வியட்நாம் போருக்கு 
அமெரிக்க ராணுவப் படையுடன் சேர்ந்து செல்கிறார்கள்.பாபாவும் ஃபாரஸ்ட்டும் சிறந்த நண்பர்களாகிறார்கள்.ராணுவப் 
பணி முடிந்தவுடன் பெரிய அளவில் மீன்வியாபாரம் செய்யப் போவதாய் பாபா ஃபாரஸ்ட்டிடம் சொல்லி வைக்கிறான்,நீயும் கூட
பார்ட்னராக சேரலாமென ஃபாரஸ்ட்டிடம் கூறுகிறான்.

வியட்நாம் போர்ப்படையில் ஃபாரஸ்ட் ,பாபா இருக்கும் அணிக்கு லெப்டினன்ட் டேன் தான் சீனியர் ஆபிசர்.அவர் சொல்வதைக்
கேட்டுத்தான் வீரர்கள் செயல்படுகிறார்கள்.ஒரு கட்டத்தில் எதிரணி விமானம் லெப்டினன் டேனின் குழுவை தாக்க, 
அதில் பல பேர் காயமடைகிறார்கள்.லெப்டினன் டேன் தன்னுடைய இரு கால்களையும் இழந்துவிடுகிறார்.
ஃபாரஸ்ட்டின்  நண்பன் பாபா இறந்துவிடுகிறான்.

இறந்திருந்தால் எனக்கும் பேர் கிடைத்திருக்கும்,இப்படி இரு கால்களை இழந்தும் தன்னை ஏன் காப்பாற்றினாய் என ஃபாரஸ்ட்டிடம் லெப்டினன்ட் டேன் 
சத்தம்போடுகிறார்.பின் லெப்டினன் டேனை பணியில் இருந்து ராணுவம் விடுவிக்கிறது.

இந்த ரெண்டு விசயத்திலும் ஃபாரஸ்ட்டுக்கு வருத்தம் இருந்தாலும்,ராணுவ முகாமில் விருப்பு,வெறுப்புகளை 
காட்டக்கூடாதென லெப்டினன்ட் டேன் முன்பு கூறியிருந்ததால் அதையே கடைபிடிக்கிறான்
ஓய்வு கிடைக்கும்போது 
ராணுவமுகாமில் நாயகன் ஃபாரஸ்ட் டேபிள்டென்னிஸ் கற்றுக்கொள்கிறார்.பின் அதிலும் 
சிறப்பாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
சில மாதங்களில் ஃபாரஸ்டின் ராணுவப் பணி முடிவுக்கு வருகிறது.

வீட்டிற்கு திரும்பிவரும் ஃபாரஸ்ட்டை அவரின் அம்மா,டேபிள் டென்னிஸ்
போட்டியில் ஜொலிக்குமாறு சொல்கிறார்.ஆனால் ஃபாரஸ்ட் தன்னுடைய நண்பனின்
கனவான மீன்வியாபாரத்தை நடத்த முடிவெடுக்கிறார்.
இதனிடையே தன்னுடைய  ஆரம்ப காலத் தோழியான ஜென்னியை கிளப்பில் பாடகியாக பார்க்கிறார்.
பல பேர் அவளை சீண்டுவதை பார்த்து கோபமடைகிறார் 
தன்னுடன் வந்துவிடுமாறு ஜென்னியை அழைக்கிறான் ஃபாரஸ்ட்.பலவித குழப்ப நிலையில் 
இருக்கும் ஜென்னி அதை மறுத்து,தனக்கு நிறைய வேலை இருப்பதாக கூறுகிறாள் . 




இந்தநேரத்தில் லெப்டினன்ட் டேன்னை எதேச்சையாக சந்திக்கிறான் ஃபாரஸ்ட்.அவருடன் 
கொஞ்ச நாட்கள் தங்கும் ஃபாரஸ்ட்,தான் மீன் வியாபாரம் செய்யப்போவதாய் சொல்கிறான்.
இதைக் கேட்டு சிரிக்கிறார்' லெப்டினன்ட் டேன்.எதைப்பற்றியும் கவலைப்படாமல்
மீன்பிடி தொழிலில் இறங்குகிறான்.லெப்டினன்ட் டேன்னும் உதவிக்கு வருகிறார்.
அதிலும் படிப்படியாக முன்னேறும் ஃபாரஸ்ட் ,நகரத்திலேயே பெரிய
மீன்வியாபார கம்பெனியாய் கொடிகட்டி பறக்கிறார்.
அதில் வரும் வருமானத்தில் பாதியை இறந்த நண்பன் பாபாவின் வீட்டிற்கு தந்துவிடுகிறான்.
லெப்டினன்ட் டேன்,தன்னை வியட்நாம் போரில் காப்பாற்றியதற்கு ஃபாரஸ்ட்டிற்கு இப்போது நன்றி தெரிவிக்கிறார்.

ஒருநாள் ஃபாரஸ்ட்டின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத தகவலைக் கண்டு வீட்டிற்கு வாருகிறான்.
ஃபாரஸ்டின் அம்மா ,தான் மனநிறைவாக இருப்பதாக கூறுகிறாள்.பிறிதொரு நாளில்
ஃபாரஸ்ட்டின் அம்மா இறந்துவிடுகிறாள். ஃபாரஸ்ட்டின் வீடு இப்போது
வெறுமையாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் ஜென்னியின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது,போதைப்பொருளுக்கு
வேறு அடிமையாக மாறிப் போயிருக்கிறாள்.
ஃபாரஸ்ட் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.மிக நீண்ட நாட்களாக தூக்க கலக்கத்தில்
இருக்கும் ஜென்னி,ஃபாரஸ்ட்டின் வீட்டில் ஓய்வு எடுக்கிறாள்.

இறுதியில் ஃபாரஸ்ட்  ஜென்னியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என 
கேட்கிறான்.ஜென்னியோ நான் உனக்கு ஒத்துவரமாட்டேன் என விரக்தியுடன் கூறுகிறாள்.
அன்றைய இரவில் ஃபாரஸ்ட்டின் ரூமிற்கு வரும் ஜென்னி,ஃபாரஸ்டுடன்
உறவு வைத்துக்கொள்கிறாள்.
மறுநாள் அவசர அவசரமாக ஜென்னி வீட்டை விட்டு கிளம்பிவிடுகிறாள்.இதனால் 
பெரும் மனச் சுமையில் இருக்கும் ஃபாரஸ்ட், திடிரென ஓடக் கிள்ளம்புகிறான்.
ஒருநாளல்ல ஒரு வாரமல்ல,மூன்று வருடமாக அமெரிக்கா முழுவதும் ஃபாரஸ்ட்
ஓடுகிறான்.இதன் மூலமும் அமேரிக்கா முழுவதும் பிரபலமடைகிறான்.
டிவிசெய்தி மூலம் ஜென்னியும் அறிந்துகொள்கிறாள்.பின் ஃபாரஸ்டிற்கு
கடிதமெழுதி அவளின் இருப்பிடத்திற்கு வரச்சொல்கிறாள்.


அதற்காகத்தான் பஸ்ஸ்டாப்பில் காத்திருப்பதாக,தன்னுடைய கதையை கேட்கும்
பாட்டியிடம் ஃபாரஸ்ட் கூறி விடைபெறுகிறான்.ஜென்னியை சந்திக்கும்
ஃபாரஸ்ட்,அவளுக்கு பையன் இருப்பதை அறிந்துகொள்கிறான்.அது 
நம்முடைய மகன்தான் என ஃபாரஸ்டிடம் கூறுகிறாள் ஜென்னி.

இந்தமுறை ஜென்னியே,திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்கிறாள்.\
சந்தோஷமாக சம்மதம் சொல்லும் ஃபாரஸ்ட்,திருமணம் செய்துகொள்கிறான்.
திருமணத்திற்கு வருகை புரியும்,லெப்டினன்ட் டேன்,செயற்கைகால் பொருத்தியிருப்பதை
மிக ஆச்சர்யமாக கேட்கிறான் ஃபாரஸ்ட்.

நாட்கள் ஓடுகிறது.ஜென்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறக்கிறாள்.
முதன்முறையாக ஜென்னியின் கல்லறை முன் அழுகிறான் ஃபாரஸ்ட்.
அம்மா,ராணுவ வீரன் பாபா,லெப்டினன்ட் டேன் அத்தனை பேரையும்
விட ஜென்னிதான் என் வாழ்க்கையில் முக்கியமானவள் என்பதை 
நினைவுகூறும் ஃபாரஸ்ட்,தன்னுடைய மகனை ஸ்கூல் வேனில் 
அனுப்புவதற்காக காத்திருக்கிறான்.

"ஃபாரஸ்ட்டின் காலுக்கு கீழே இருக்கும் ஒரு இறகு,காற்றில் பல திசைகளில் பறப்பதுடன் "நிறைவுபெறுகிறது.

திரைப்படத்தின் மொத்த கருவையும் அந்த ஒற்றை இறகு அழகாக உணர்த்திவிடுகிறது.

ஃபாரஸ்ட் தன் வாழ்க்கையை பற்றி குறிப்பிடும்போது
அன்றைய நேர அரசியல் சூழ்நிலையையும் \
அவ்வப்போது நினைவு படுத்துகிறார்.
அமெரிக்க அதிபர்களை தான் சந்தித்ததை எந்தப் பெருமையிமின்றி 
ஃபாரஸ்ட் கூறுவதை ,பேருந்திற்காக நிற்கும் பயணிகள் 
ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.எந்தவிதப் தற்புகழ்ச்சி 
இல்லாமல் ,தன்னுடைய சுய வாழ்க்கை குறிப்பை 
ஃபாரஸ்ட் சொல்வதுதான் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

மிகச் சிறந்த படமாக கருதப்படும் ஃபாரஸ்ட்கம்ப்,பை
விடுமுறை நாளில் அமைதியான சூழ்நிலையில் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களில் 
இந்தப் படமும் இடம்பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை சுருக்கமாக சொல்ல நான் முயன்றாலும்,
நாயகன் ஃபாரஸ்டின் வாழ்க்கையைப் போலவே 
இந்தப் பதிவையும் அதன் போக்கிலே விட்டுவிட்டேன்.

ஃபாரஸ்ட் கம்ப்பின் முக்கிய கதாபாத்திரங்களான
1)ஃபாரஸ்ட் கம்ப்
2)ஜென்னி
3)ஃபாரஸ்டின் நண்பன் பாபா 
4)லெப்டினன்ட் டேன் 

ஆகியோரை பற்றிய குறிப்புகளையும்,சில நுணுக்கமான காட்சிகளை பற்றியும்  இன்னொரு பதிவில் எழுதவேண்டியிருக்கிறது.
நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்,நன்றி !

நடிகர் :டாம் ஹாங்க்ஸ் மற்றும் பலர்
ஒளிப்பதிவு:டான் பர்கஸ்


Friday, July 27, 2012

பிரபலம் !


சரியாக 12 வருடங்களுக்கு முன் ,எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழா சமயம் ,
ஒவ்வொரு பெரிய மனிதர்களும் தன் பங்குக்கு ,இரவு நேர நிகழ்ச்சிக்கான பொறுப்பை
எடுத்துக்கொள்வார்கள்.ஆடல் பாடல் ,இசைநிகழ்ச்சி'நாடகமென ஒவ்வொரு நாளும்
நடைபெறும்.அப்படிப்பட்ட நேரத்தில் ,அந்த நேரத்தில் எம்.எல்.ஏ  வாக இருந்த ஒரு பெரியவர்.
ஒரு இளம்பெண்ணை மேடை ஏற்றி ,இவர்தான் கிருபானந்த வாரியாரின் இளம்சிஷ்யையென
அறிமுகப்படுத்தினார்'.சொற்பொழிவாற்றுவதில் திறமை மிக்கவரென சிலாகித்தார்.

அவர் சொன்னபடியே ,நிறைய புராணக் கதைகளை ரசிக்கும்படியாகவே சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்
அந்தப் பெண்.அதே  நேரத்தில் சொற்பொழிவு கேட்பதில் ,எங்கள் கிராமத்து மக்களுக்கு மிகவும்
அயர்ச்சியாக இருந்ததால் ,நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அதைக்கண்டும் ,மனம்தளராமல் .அதைப் பற்றி கவலைப்படாமல்
அந்தப் பெண் உரையாற்றிக்கொண்டிருந்தாள்.

அந்த எம்.எல்.ஏ இருக்கும்வரை ஒவ்வொரு திருவிழா சமயம்  அந்தப் பெண் ,கண்ணன் கதைகள்.
ராமாயண நெறிமுறைகள் ,என பல ஆன்மிக கதைகளை ஒவ்வொரு தினமும் கூறிக்கொண்டிருந்தார்.அதைக் காத்துகொடுத்துக்
கேட்க ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் மக்கள் கூட ஆரம்பித்தனர்.ஒருமுறை என் அப்பா கூட ,அந்தப் பெண்ணின்
பேச்சுத் திறமை கண்டு ,அவருடைய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.அந்த பெண் கூட எங்கள் வீட்டில்
இரண்டு நாள் தங்கினார்.மிகவும் எளிமையாக ,நம் வீட்டுப் பெண் போல நடந்துகொண்டார்.3000ரூபாய்,4000ரூபாய் அளவுக்கு
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்ததால்,சுற்றியுள்ள கிராமங்களிலும் அந்தப் பெண்ணை சொற்பொழிவாற்ற
கூப்பிட்டார்கள்.எப்போது மெட்ராஸ் வந்தாலும் ,எங்கள் வீட்டுக்கு வாருங்களேன கூறிவிட்டுச் சென்றார்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தார்.

பின் ஒரு லோக்கல் சானலில் ,அரை மணி நேர ஆன்மீக சொற்பொழிவாற்றி ,அதை சிடியாக விற்க ஆரம்பித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்புதான் சொற்பொழிவாற்ற 7000ரூபாயாக மாற்றினார்.அந்த சமயம் ,டிவி சானல்களில் தோன்றி ஆன்மீக
உரையாற்றினார்.என் அப்பா கூட சந்தோஷப்பட்டார்.பின் சன் டிவி ,ராஜ் டிவி ,ஜெயா டிவியென பல சானல்களில் தற்போது
ஆன்மிக தளங்களை பற்றி நிகழச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை ஊர் திருவிழாவிற்காக ,அப்பா ,அந்தப் பெண்ணை அழைத்துவர நினைத்து அந்த பெண்ணின் அப்பாவிடம் பேசினார்.
"ஒரு மணிநேர சொற்பொழிவிற்கு 40,000 கேட்டார்'.
எதுவும் பேசாமல் அப்பா தொலைபேசியை வைத்துவிட்டார்.

மிருணாள்சென்(Mrinal sen)


இந்திய சினிமா ,தனது நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில்,
அதன் பிதாமகர்களில் ஒருவரான ,மிருணாள்சென் 90வயதை எட்டியிருக்கிறார்.அவருடைய
கை பிடித்து நடை பழகியதுதான் இந்திய சினிமா என்று சொல்லலாம்.80களில் வேலைக்குச்
செல்லும் ஒரு பெண் ,இரவில் வீட்டுக்குத் திரும்பாமல் ,அடுத்த நாள் காலை வந்து தன்னுடைய தினசரி,அலுவல்களைத்
தொடர்ந்துகொண்டு இருப்பாள்.அவளிடம் எந்தவொரு மாற்றமும் தென்படாது.அவளைத் தேடி இரவுமுழுக்க
ஊரெல்லாம் அலைந்த குடும்பமோ,பேயறைந்துகிடக்கும்.
"ஏக் தின் பிரதி தின்" படத்தில் இப்படியொரு காட்சியைவைத்து,நம் வீட்டுப் பெண்கள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை
' என்று சமூக குற்றவுணர்வுகொள்ளச் செய்தவர்."புவன் ஷோம்" படத்தில் 50  வயது நபரை நபரை 20 வயதுப் பெண்
காதல் கொள்வது  போன்ற கலாசார அதிர்வுகளை ஏற்படுத்தியவர்.சிதைந்த கட்டடத்தில் சிரமத்தில் வாழும்
ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையையும் இடிபாடுகள் சூழ்ந்து நிற்கும்
சோகத்தைச் சொல்லும் "காந்தர்" படத்தின் உருக்கத்தை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.மிருணாள் சென்னின்
"மிடாஸ் டச் "சுடன் வெளிவந்த படங்கள் அனைத்துமே புதிய அலை சினிமாக்கள்தான்.

"மிருணாள் டா" என்று அன்புடன் அழைக்கப்படும் மிருணாள்சென் கல்கத்தா பல்கலைக்கழக மாணவராக
இருந்த காலத்தில் ,கம்யுனிஸ்ட் கட்சியின் கலாசாரப் பிரிவில் தொண்டரும்கூட.

ஆரம்பத்தில் "மெடிக்கல் ரெப்" ஆகச் சில காலம் அலைந்துவிட்டு பிறகு ,ஆடியோ டெக்னிஷியனாக சினிமாவில்
சேர்ந்தார் சென்.1955-ல் சாதாரண நடிகராக இருந்த உத்தம் குமாரை நாயகனாகக்கொண்டு ராட்போர் என்ற படத்தை
என்ற படத்தை இயக்கினார் சென்.படம் ஓடவில்லை,அடுத்து நீல் "ஆகஷெர் நீச்சே "என்ற படத்தை இயக்கினார்,
இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் இறுதித் தருணங்களில் ஓர் ,இந்தியப் பெண்ணுக்கும்,புலம்பெயர்ந்த
சீனக் கூலிக்கும் இடையிலான அன்பைச் சொல்லும் அந்தப் படத்தின் பின்னணியில் அரசியல் நெடி தூக்கலாக
அமைந்திருந்தது.இதனாலேயே, இந்திய அரசாங்கம் தடை செய்த முதல் படமானது அந்தப் படம்.
இரண்டு வருடங்களுக்கு இந்தத் தடை நீடித்தது,அடுத்தடுத்தும் அரசியல் பேசும் படங்களையே இயக்கினார் மிருணாள்சென்.

மிருணாள்சென்னின் படத்தை தடை செய்த ,அதே இந்திய அரசுதான் 1964-ல் இந்தியாவின்
5000 ஆண்டு கால வரலாற்றை ஆவணப் படமாக எடுக்கச் சொல்லி அவரிடமே வந்து நின்றது .'மூவிங் பெர்ஸ்பெக்டிவ்ஸ்'
என்று தலைப்பிட்டு அந்தப் படத்தை இயக்கினார்.



ஃபனா, 'தோபி காட்' கஹானி போன்ற சமீபத்திய படங்களில் கதை நிகழும் நகரங்களும் கதாபத்திரமாகின.
இப்படியான படங்களுக்குப் பாதை அமைத்தது சென்தான்.அவருடைய "இன்டர்வியு" "பதாதிக்" "மஹாபிரித்வி"
போன்ற பல படங்களில் கொல்கத்தா ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுக்க நிறைந்திருக்கும்.சென்னின் முதல் படத்தில்
நடித்த உத்தம்குமார் ,பிறகு வங்காள சினிமாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.ஆனால் சென்னுக்கு எப்போதும்
ஹீரோக்கள் தேவைப்பட்டதே இல்லை,கதைதான் அவருக்கு ஹீரோ .

தேர்ந்த வாசிப்பு அனுபவம் மிக்கவராக இருந்ததால்தான் புகழ்பெற்ற வங்காள எழுத்தாரும் ,சென்னின் நண்பருமான
சுபோத் கோஷின்"கோத்ரண்டா" கதையை "ஏக் அதூரி கஹானி'என்ற படமாக எடுக்க முடிந்தது.
நமக்கு துயரத்தை ஏற்படுத்துகிற எதிரிகள் வெளியே இருக்கிறார்கள் என்று மற்ற இயக்குனர்கள் படங்களை
மையபடுத்திக்கொண்டு இருந்த போது,உண்மையான எதிரி நமக்கு உள்ளேயே இருக்கிறான். என்று சொல்லி,மத்திய தர
வர்க்கத்தின் உலகம் ,அதனுடைய விருப்பு ,வெறுப்புகள் போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியவர் சென்.இந்திய சினிமா
இவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட மிக முக்கியமான 'கிரியேட்டிவ்'பார்வை இது.இவரின் பல படங்களை
பெர்லின்,வெனிஸ்,மாஸ்கோ,சிகாகோ,கெய்ரோ என பல உலக அளவிலான திரைப்பட விழாக்களில்
திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றன.இவருடைய 'காந்தர்"திரைப்படம் மட்டுமே 1984 மற்றும் 2010
ஆகிய வருடங்களில் கேன்ஸில் இரண்டு முறை திரையிடப்பட்டு இருக்கின்றன.ஓர் இயக்குனரின் பெருமையை உணர்த்த
இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும் .

"இன்று என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கிறார்கள்.அந்தப் பணத்தில் நான் ஐந்து
படங்கள் எடுத்து விடுவேன்" சமீபத்தில் நடந்த அவரின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் இப்படிச் சொல்லிச் சிரித்திருக்கிறார் சென்.
திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்
மாணவர்களிடத்தில் சொல்வார் சென்.சொல்வதோடு மட்டும் அல்லாமல் ,தன் சொற்களுக்கு ஏற்றபடியே
வாழ்ந்துவருகிறார் என்பதுதான் மற்றவர்களிடத்தில் இருந்து மிருணாள்சென்னைத் தனித்துவப்படுத்துகிறது.

                                                                                               நன்றி ஆனந்தவிகடன் !




Tuesday, July 24, 2012

ஜெயலலிதாவின் தொடர்கதை !


ராமாயணத் தொடர் கூட இத்தனை வருடமாக இழுத்திருக்க முடியுமா என தெரியவில்லை.அதையும் தாண்டி
அம்மையாரின் (ஜெயலலிதா )வழக்கை வாரம்,போய்,மாதம் போய் ,வருடங்களும் கடந்துகொண்டே இருக்கின்றன.
மற்றவர்களின் வழக்குகளை எல்லாம் விரைந்து முடிக்கச் சொல்லி ,அறிக்கை விடும் ஜெயலலிதா ,
தன்னுடைய  வழக்கு நிலுவையில் இருக்கிறதென்பதை மறந்தும் ,பொதுவெளியில் காட்டிக்கொள்ளாமல்
நடந்துகொள்கிறார்.

ஒரு நிருபரிடம் ஜெயலலிதா இப்படிப் பதில் சொல்கிறார்,என்னையும் ,கருணாநிதியையும் ஒப்பிட்டுப்
பேசாதிர்கள்,நான் ஊழல்வாதி இல்லையென,ஆங்கில சானல் நிருபரிடம் இப்படிக் கூறுகிறார்.
அவருக்கு ,பெங்களூரு நீதிமன்றத்தில் ,தன் மீதான ஊழல் வழக்கு இருப்பதாகவே ,நினைக்கவில்லை.
அப்படிப்பட்ட நேர்மையான ? ஜெயலலிதா ,தன் மீது புனையப்பட்ட வழக்கென ஒவ்வொரு முறையும்
கூறிக்கொள்பவர்,நேரடியாக சென்று வழக்கை சந்தித்திருந்தால் ,ஒரு வருடத்தில் முடிந்திருக்குமே.

ஒவ்வொருமுறையும் ,எதையாவது காரணம் சொல்லி ,கீழ்கோர்ட்,மேல்கோர்ட்டென அப்பீல் வாங்கி ,தனிநீதிமன்றம்
அமைத்து,பின் அங்கேயும் உயர்நீதிமன்ற அப்பீல்,உச்சநீதிமன்ற அப்பீல் என காலம் கடத்திக்கொண்டிருப்பதைப்
பார்த்தாலே தெரிகிறதே ,ஜெயலலிதா  ஒரு வரலாற்று சிறப்புபெற்ற ஊழல்வாதியென.அரசு வழக்கறிஞர்,அடுக்கடுக்காக
ஜெயலலிதா  மீது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை வைத்து வாதாடினால்,அதற்கான விளக்கத்தை தராமல்,அந்த
வழக்கறிஞரை மாற்றத்தான் ஜெயலலிதா அன் கோ  முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


ஜெயலலிதாவின்  தொடர்கதையில் ,இரண்டாவது கதாநாயகியான சசிகலாவை விட்டு ,எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பென
வாக்குமூலம் கொடுக்கவைத்தாயிற்று.இருப்பினும்,நீதிபதி அம்மையாரை விடுவதாக இல்லையென தெரிந்தபின்,
உடல்நிலை சரியில்லை,சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் ,தினகரனுக்கு வாய்ப்புண் என சகட்டு மேனிக்கு ,அசட்டு 
காரணங்களை அடுக்கி ,அடுத்தடுத்த வாரங்களை கடந்தாயிற்று .நீதிபதியும் வெறுத்துப்போய் ,அடுத்தமுறை 
காரணம் எதுவும் சொல்லக்கூடாதென,கண்டிப்புடன் கூறி ,வழக்கு விசாரணையை ஜூலை31ம் தேதி 
ஒத்திவைத்துவிட்டார்.இப்போதும் ஒரு காரணத்தை சொல்ல ,ரெடியாக இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை மாதங்கள் ,வருடங்கள் இந்த பெங்களூரு தொடர்கதையை இழுக்கப் போகிறாரென தெரியவில்லை.

வளர்க ஜெயலலிதாவின் தொடர்கதை.

Monday, July 23, 2012

விலைவாசி !


ஆடிக்காத்துல தலைவிரிக்கோலமாத் திரியுறோமேன்னு நினைச்சு முடியை வெட்டலாமுன்னு போனா ,
100 ரூபா கேக்குறான் .போன தடவை வெட்டுனப்ப 80ரூபாதான் கொடுத்தேன்னா ,அது போன
மாசம்;இது இந்த மாசம் அப்படீங்கிறான்.

என்னய்யா இப்படி ஏத்திகிட்டே போற அப்படின்னு அதட்டிக் கேட்டா,என் கடை,வீடு எல்லாத்தோட வாடகையை
ஏத்திகிட்டே போறானே,மொதல்ல அவனை நிறுத்தச் சொல்லு,பிறகு நான் நிறுத்துறேன்னு
வசனம் பேசுறான் .
அப்படி என்னய்யா வாடகையை ஏத்திட்டான்னு கேட்டேன்.100சதுர அடி கடைக்கு 5000-ன்னு சொல்றான்.போன
மாசம் வரைக்கும் 3500ரூபாய்தான் கொடுத்தானாம்.12 வருஷத்துக்கு முன்னாடி காம்ப்ளெக்ஸ்(மூணே கடைதான்)
கட்டினப்ப முதல்முதலா 300 ரூபாய் வாடகை கொடுத்து பூஜைபோட்டு கடையை வச்சேன் சார்.ஓனர் தாத்தா அப்பல்லாம்
நல்லவரா இருந்தாரு.நேத்தைக்கு திடீர்னு வந்தாரு.இந்த மாசத்திலேயிருந்து 5000 வாடகை கொடுத்துடுன்னாரு.நான்
பதில் சொல்றதுக்கு இஷ்டமில்லாட்டி காலி பண்ணிக்கன்னுட்டார்.

கடைக்காரன் சொன்னதைக் கேட்டதும்,உடனே ஓனர் தாத்தாவைப் பார்த்து,உனக்கு ஏன்யா இந்த பேராசை?
உன்னாலதானே எனக்கு முடிவெட்ட 20ரூபாய்அதிகமாயிடுச்சுனு நாக்கைப் பிடுங்குற மாதிரி பேசிடுவோமுன்னு
நினைச்சேன்.கடையின் பின்னால் இருந்த அவருடைய  வீட்டை எட்டிப் பார்த்தேன்.இந்தியன் தாத்தா மாதிரி சேரில்
உக்காந்து பேப்பர் படிச்சிகிட்டு இருந்தார்.அவருக்கு ஒரு வணக்கம் வச்சிட்டு,என்னோட பேரு ஏகாம்பரம்னு
என்னை அறிமுகப்படுத்திகிட்டு கடை ஏதாவது வாடைகைக்கு இருக்கான்னு கேட்டேன்.

"கடையெல்லாம் இல்லையப்பா!இந்த காலத்துல எவன் கடையை காலி பண்றான்?மூணு பேரும் 12வருஷமா இருக்கானுங்க.
காலி பண்ணா வாடகையை 7000ன்னு ஏத்தலாம்னு பாக்கேன்.பழைய ஆளுங்களாச்சேன்னு பரிதாபப்பட்டு 5000த்துக்கு
விட்டுருக்கேன்" என்றார்.

நைஸாகப் பேசினப்ப ,அவர் முழுக்கதையும் வெளியே வந்துச்சு.வேலை பார்க்கும்போது வாங்கிப்போட்ட இடத்தில்
ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்டில் கடையும் வீடும் கட்டினாராம் தாத்தா .பென்ஷன் இல்லாத உத்தியோகம்.தாத்தா
பாட்டி இருவருக்கும் மருத்துவச் செலவு 4000-5000-ன்னு ஆகிறதாம் .பத்து வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த மூன்று
கடை அட்வான்சும் சேர்த்து 3000ரூபாய் எஃப்டியில் இருக்காம் .

தாத்தா,பாட்டி ரெண்டு பேருக்கும் ஒரு டீசன்ட் லிவிங்கிற்கு 15000 வேணுமாம்.இன்னைக்கு ஒரு கடைக்கு 7000
வாடைகைங்கிற கணக்குல பத்து மாச அட்வான்ஸ் வாங்கினா 2,10,000 ரூபாய் கிடைக்கும் என்று கணக்கு போட்டார்,ஆனா
ரொம்ப பெரிய மனசு பண்ணி ,5000 ரூபாய்தான் வாடகை வாங்குறார்.அவரு என்ன பண்ணுவாரு,மருத்துவச் செலவு ,,டிவி
மொபைல்,சாப்பாடு ,துணிமணியோட விலை ஏறிகிட்டே இருக்கே!இதுக்கு அவரு அதிகமாச் செலவு செய்ய வேண்டியிருக்கே!
ஏன்தான் இந்த விலைவாசி ஏறுது என்ற கேள்வி மண்டையைப் பிராண்ட ஆரம்பித்தது.மனுஷனுக்கு தேவையான
உணவுப்பொருள் விலை ஏறிகிட்டே போகுது.விலை ஏறுனா அதை தயாரிக்கிறவனுக்கு நிறைய லாபம் கிடைக்கனுமில்லையா?
ஆனா காய்கறி ,அரசி ,பருப்பை உற்பத்தி செய்ற விவசாயி ஏழையாத்தான் இருக்குறான் .விவசாயிகிட்ட குறைஞ்ச விலையில
வாங்கி ,நம்மகிட்ட அதிக விலைக்கு வித்து கொழுத்த லாபம் சம்பாதிச்சுடுறாங்க சில பேரு.

உணவுப்பொருள்தான் இப்படி பிரச்சினைன்னா,முடிவெட்டுறது,பென்சிலு,பேனா,பேப்பருன்னு எல்லாமே விலை ஏறிகிட்டே போகுது.
இப்படி எல்லா பொருளோட விலை,ஏத்தத்துக்கும் காரணம் நிலத்தோட விலை ஏறுனதுதான்னு தோணுது.முடி வெட்டுற கடைக்கும்
இடம் வேணும்.அது ஏற ஏற எல்லாமே ஏறுதுங்கிறது தெளிவா தெரியுது.

சரி எடத்தோட விலை ஏன் ஏறுது ?பொருளாதாரம் வளருதுங்குறோம்.எல்லாரும் வேலைக்குப் போறோம்.எல்லாரும்
சம்பாதிச்சு ஒரு இடத்தை வாங்கிப் போட்டறனுமுன்னு இடத்தை துரத்தி துரத்தி வாங்கி விலையை ஏத்துறோம்.
வேலைக்குப் போற நாமளே விலைவாசி ஏறுனா கூலியை கூட்டிக் கேக்குறோமே!முதலீடு போட்டுத் தொழில்
செய்ற பண்றவன் என்ன நமக்கு சளைச்சவனா?நாம ஒரு ரூபா கேட்டா அவன் பத்து ரூபா விலையை ஏத்திக்கிறான்.
நாம விலைவாசி ஏறுதுன்னு புலம்புறோம்.கடனை வாங்கி இடத்தை வாங்குறோம்.இடத்து விலை ஏறுது.அதனால வாடகை
ஏறுது.தொழில் பண்ண முதலீடு அதிகமாப் போடவேண்டியிருக்கு .அதனால விலைவாசி ஏறுது.அதனால பணவீக்கம் அதிகமாகுது.
பணவீக்கம் அதிகமானதாலே வட்டி ஏறுது.வட்டி ஏறுனா நாம வாங்குன வீட்டுக் கடனோட தவணை ஏறுது.நமக்கு கழுத்து இறுகுது.

நம்ம கழுத்துல இந்த சுருக்கைப் போட்டது யாருங்க?ஒருவேளை நாமளேதானோ என்னவோ !
நிலத்தோட ஏற்றத்தை ஏதாவது பண்ணலைனா ,சராசரியா 65வருஷத்துல மனுஷனை ஜெயிக்கிற மண்ணு,ரொம்ப சீக்கிரமாவே
ஜெயிச்சுடுமோன்னு பயமா இருக்குங்க.
                                                                    நன்றி நாணயம் விகடன்!

Friday, July 20, 2012

நாட்டு நடப்பு (இந்தியா )

ஜனாதிபதி கலாட்டா !




ஒருவழியாக ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்திருக்கிறது .மம்தா கடைசி நேரத்தில்
இப்படி மனம்மாறுவார் என்பதை காங்கிரஸ்சே அறிந்திருக்காதோ என நினைப்பது போல ,பிரணாப்பின் முகம்
 மேலும் மகிழ்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது .அதே சமயத்தில் ,சங்மாவின்
எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.
அவரை முதலில் ஆதரித்த ஜெயலலிதா .சங்மாவுக்கு
எதுவும் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..இந்த களேபரத்தில் முலாயம்சிங் ,சங்க்மாவுக்கும்
ஒரு குத்து ,பிரனாப்புக்கும் ஒரு குத்து என்று ஓட்டுச்சீட்டில் மாற்றி மாற்றி குத்தியது
ஒரு கலகல அரசியல் தமாஷ்தான் .அடுத்ததாக துணைஜனாதிபதி தேர்தல் களமும்
சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியும்,பாஜக சார்பில் ஜஸ்வந்த்சிங்கும்
போட்டியிடுகிறார்கள்.அன்சாரிக்கே தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வாய்ப்பு அதிகமென சொல்லப்படுகிறது..
துணை ஜனாதிபதி பதவி ,ஜனாதிபதி பதவி போன்றே முக்கியமில்லாத ஒன்றாக கருதப்படுவதால் ,இதில் தோற்றாலும் பாஜகவுக்கு
பின்னடைவு இல்லை என்பதே நிதர்சனம்.


தமிழ் ஈழமும்,தமிழக அரசியல் கட்சிகளும் !







கடந்த இரண்டு மாதமாக ,தனித்தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து
அரசியல் வித்தையை நடத்திக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.டெசோ மாநாடு நடத்தி
தமிழ் ஈழ விதையை மீண்டும் தூவுவேன் என்று முதலில் சொன்ன கருணாநிதி.இப்போது
தன் நிலையை மாற்றி (எத்தனை முறை,தன்  நிலையை மாற்றினார் என்பதை கணக்கில் வைக்க முடியவில்லை )
தனி ஈழ கொள்கையை இப்போது பரப்ப விரும்பவில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.
இப்போது இதையும் மாற்றி,தமிழ் ஈழ கொள்கையை நான் கைவிடவில்லை,இப்போதைக்கு அந்த எண்ணமில்லை
என்று யாருக்கும் புரியாத வண்ணம் மீண்டும் குழப்பியடித்து இருக்கிறார்.

இதனிடையே ,இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கு போராடும் தமிழக கட்சிகள்,தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும்
இலங்கை தமிழ் அகதிகளை ,கண்டுகொள்ளாமல் இருப்தை அறிய முடிகிறது.சமீபத்தில் மண்டபம் முகாமில் ,
மூன்று குழந்தைகளுக்கு தாயான ,ஈழ தமிழச்சியை ,வன்புணர்வு செய்ய முயற்சித்து இருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்!
இதைக் கண்டிக்க வைகோவும் முன்வரவில்லை,கருணாநிதியும் முன்வரவில்லை.இலங்கை அகதிகளை கொத்தடிமைகள் போலத்தான்
இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது ,யாருக்கும் தெரியாமல் இருக்கவில்லை.அவர்களுக்கான அடிப்படை வசதிகள்
செய்து தர,இதுவரை எந்த தமிழினத் தலைவர்களும் கடிதம் எழுதாமலிருப்பது வியப்பின் சரித்திரக் குறியீடுதான் .




பெண்களின் மீதான வன்முறை வாரம் !





கடந்த வாரம் முழுக்கவே பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் மற்றும் சித்திரவதை செய்திகளை 
பார்க்க முடிந்தது.அதில் குறிப்பிட்ட சம்பவமான அசாமில் நடைபெற்ற 
பாலியல் வெறியாட்டம்தான் .இளம்பெண்ணை 20பேர் கொண்ட கும்பல் மானபங்கப்படுத்தப் பட்டதை
தொலைக்காட்சி நிருபர் படம்பிடித்து உலகிற்கு காட்டியிருக்கிறார்.இருபது பேர் கொண்ட கும்பலை 
பிடித்ததாக சொல்லும் அசாம் அரசு,அந்த நிருபரையும் இப்போது கைது செய்திருக்கிறது.அந்தப் பெண்ணை காப்பாற்ற 
போகாமல் ,படம் பிடித்தாதாக கூறி வழக்கு போட்டிருக்கிறது அசாம் காவல்துறை..அந்த நிருபரை ஏதோ சூப்பர்ஹீரோவாக 
நினைத்துவிட்டார்கள் போல.இருபது பேர் கொண்ட கும்பலை ,ஒரே ஆள் புரட்டிப் போடும் வித்தையை தெரிந்துவைத்திருக்க 
வேண்டாமா என காவல்துறை இப்போது கேட்கிறது.

இந்தக் கேள்வியை அசாம் காவல்துறை கேட்டபோதே ,வழக்கு எந்த திசையில் பயணிக்கப்போகிறதென்பதை அறிய முடிகிறது.
வாழ்க ஜனநாயகம் என்ற கோஷத்தை இப்போது சொல்லத்தோனுகிறது!



UNLEASHED (ஆக்சன் சினிமா )


அடிமை போல வளர்க்கப்பட்ட ஒருவன் ,அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரும் ஆக்சன் கதை இந்த UNLEASHED

பாப் ஹிஸ்கின் என்ற கந்துவட்டிக் கும்பல் தலைவன்,வசூல் செய்வதற்காக அடியாள் ஒருவனை சிறுவயதிலிருந்தே (டேனி)
நாயை போல் கட்டி வைத்து வளர்க்கிறான் .யார் பணத்தை திருப்பி தராமல் இருக்கிறார்களோ ,அவர்கள் மீது
இவனை விட்டு அடிக்கச் சொல்கிறான்.டேனிக்கு அடிப்பதை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.ஒரு சமயத்தில்,கந்துவட்டி தலைவனை
எதிராளிகள் அடிக்கும்போதும்,அவனுக்கான கட்டளை வரவில்லை என்பதால் ,அடிக்காமல் இருக்கிறான் .இதைக் கண்டிக்கும்
கந்துவட்டி தலைவன் (பாப் ஹிஸ்கின்) அவனை திட்டுகிறான் .

இதனிடையே வசூல் செய்யும் இடத்தில் ,பியானோ கற்றுத்தரும் பெரியவரை சந்திக்கிறான்,அவனுக்கு பியானோ மேல்
ஆசைவருகிறது,அந்தப் பெரியவரும் அவனுக்கு பியானோ கற்றுத்தர ஆசைப்படுகிறார்.கந்துவட்டிக் கும்பலின் அட்டகாசத்தால்,எதிராளிகள்
அவர்களை காரோடு வைத்து சுடுகிறார்கள்.அதிலிருந்து தப்பிக்கும் டேனி ,பியானோ கற்றுத்தரும் பெரியவரிடம் அடைக்கலம் ஆகிறான்.
பெரியவரின் வீட்டில் ,பெரியவரின் வளர்ப்பு மகளான விக்டோரியாவை சந்திக்கிறான்,விக்டோரியா  அவனுக்கு எல்லாவற்றையும்
சொல்லிக்கொடுக்கிறாள்.


இதனிடையே ஷாப்பிங் செல்லும் டேனி,கந்துவட்டிக் கும்பல் ஆட்களின் பிடியில் சிக்கிக்கொள்கிறான்.விருப்பமே இல்லாமல் செல்லும்,அவனுடைய தாயாரை
பற்றி கந்துவட்டிக் கும்பல் தலைவனிடம் கேட்கிறான்.அவனுடைய தாய் ஒரு விபச்சாரி என்று பொய் சொல்லி ,அவனை அடைக்கிறான்.மீண்டும் டேனியை வைத்து
அடிதடி சண்டையில் விட்டு ,பணம் பார்க்கிறார்கள்.இது பிடிக்காத டேனி,அங்கிருந்து தப்பி ,மீண்டும் பியானோ விற்கும் பெரியவரிடம் போகிறான்

அவருடன் சேர்ந்து ,அவனின் அம்மாவைப் பற்றி விசாரிக்கிறான்.அப்போதுதான் அவனுடைய அம்மா விபச்சாரி இல்லை ,பியானோ டீச்சர் என்பதை
அறிந்துகொள்கிறான்.அவனுடைய அம்மாவை கொன்றது ,கந்துவட்டிக்கும்பல் தலைவன்தான் என்பதை அறிந்துகொள்கிறான்.கந்துவட்டித் தலைவனின் ஆட்களும்
டேனியைத் தேடி வர ..அவர்களிடம் இருந்து எப்படி மீள்கிறான் என்பதை சண்டைக்காட்சிகளை இறைத்து சொல்லியிருக்கிறார்கள்.



பாதி நேரம் ஆக்சனாகவும்,மற்றொரு பாதி டிராமாவாகவும் படத்தை எடுத்திருக்கிறார்கள்.விக்டோரியா டேனிக்கு சாப்பிட
சொல்லிக்கொடுக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது .தமிழ் டப்பிங்கிலும் இந்தப் படம் வந்திருக்கிறது.டாரன்ட்டில் தேடி பார்த்துக்கொள்ளலாம்.ஆக்ஷனில் அசத்தும்
டேனிக்கு எதுவுமே தெரியாமல் ,தலையை கவிழ்த்துகொள்ளும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருகிறார்.

UNLEASHED - ஒரு முறை பார்க்கலாம்








LOCKOUT (பிரெஞ்ச் ஆக்சன் திரைப்படம்!)


விலாவரியாக சொல்ல நேரம் வாய்க்காததால் சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்!

கதை 2079ம் ஆண்டு நடக்கிறது .கொடும் குற்றவாளிகளை விண்வெளியில் கூடம் அமைத்து.
ஒவ்வொரு குற்றவாளிகளையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.இதுசம்பந்தமாக அமெரிக்க பிரெசிடென்டின்
மகள்,விண்வெளி சிறைக்கூடத்திற்கு வந்து ,சிறைக்கைதியிடம் இந்த புதியமுறையை பற்றி விசாரிக்க முயல்கிறார்.
எதிர்பாராதவிதமாக சிறைக்கைதி ,அங்குள்ள அதிகாரிகளை சுட்டு,அமெரிக்க பிரெசிடென்டின் மகளையும்,அங்குள்ள அதிகாரிகளையும்
பிணைக்கைதியாக வைத்துக்கொள்கிறார்கள்.

பிரெசிடென்டின் மகளை காப்பாற்ற வேண்டி ,பூமியில் உள்ள அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.அதற்காக ஸ்நோ(அமெரிக்காவை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட ) என்ற
ஒருவனை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள்.ஸ்நோவுக்கும் அங்கே போனால்,அவன் மேல் விழுந்த பழியை துடைக்கலாம் என்பதால்
கிளம்புகிறான் ..அதன் பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.பிரெசிடென்டின் மகளாக வரும் நடிகையும்(எமிலி)
தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.தன்னை மட்டும் காப்பாற்றினால் போதுமென நினைக்காமல்,
அங்கு வேலை செய்யும் அமெரிக்கவாசிகளையும் காப்பாற்ற சொல்லி கேட்டு,மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகிறார்



படத்தில் இடை இடையே பஞ்ச் டயலாக் போன்ற வசனங்களை ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள்.கேமேராவின் கோணங்கள் சுவாரசியப்படுத்துகிறது .வில்லன்களின் (சிறைக்கைதிகள்)அண்ணன்,தம்பி
பாசப்பிணைப்பும் படத்தில் மெலிதாக காட்டப்படுகிறது.ஒவ்வொரு பிணைக்கைதிகளை தம்பிக்காரன் சுடும்போது,அதை கண்டிக்கும் அண்ணன் ,
அவனை எதுவும் செய்ய மனம் வராமல் தவிக்கிறான்.பிரெஞ்சு பட இயக்குனர்கள்,தமிழ் சினிமாவை பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வருவதை
தவிர்க்க முடியவில்லை.

லாக்அவுட் - ஆக்சன் பொழுதுபோக்கு!



Sunday, June 3, 2012

WOMEN IN BLACK (ஹாலிவுட் விமர்சனம் )


திகில் பட வரிசைகளில் மற்றுமொரு படம் !கருப்பு கவுன் ஆவிப்பெண்ணை தூரமாக காட்டி ,
பின் கொஞ்சம் கொஞ்சமாக அருகே சென்று நம்மை பயமுறுத்தும் கான்செப்ட்தான் படத்தின் 
முக்கிய அம்சம் !


பத்தொன்பதாம் நூற்றாண்டில் கதை தொடங்குகிறது
மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கையில் ,திடிரென ஒரு சத்தம் கேட்கிறது ,அதன் பின் அந்த மூன்று
குழந்தைகளும் சுயநினைவிழந்து ஜன்னலை திறந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள் ..இந்த சம்பவத்தால் ,அங்கே
ஒரு கெட்ட விஷயம் அங்கு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன .நிறைய குழந்தைகள் அந்த ஆவியால்
கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி பரவுகிறது .இதைப் பற்றி அறிய நம் ஹீரோ
அங்கு செல்கிறார் ..அவர் அந்த ஆவியைப் பிடித்தாரா ?இல்லையா ?என்பதே WOMEN IN BLACK திரைப்படத்தின்
கதை !


திகில் படங்களில் ,நமக்கு திகிலைத் தருவதே மனதை கலங்கடிக்கும் பின்னணி இசைதான் .அந்த வகையில்
படத்தில் சில மர்மமான காட்சிகளை காட்டும்போது ,இசையால் மிரட்டுகிறார்கள் .கதாநாயகன் வேறு யாருமல்ல ,
நம் ஹாரிபாட்டர் ஹீரோ (டேனியல்)தான் இதில் நடித்திருக்கிறார் ..இது போன்ற திகில் படங்கள் அவருக்கு அல்வா சாப்பிடுவது
போல் !பையன் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார் .
அந்த இருட்டு பங்களாவில் தங்கும்போது ,அந்த ஆவி ,டேனியலின் பக்கத்திலயே உலா வருவது
,பொம்மைகளை ஆடவிட்டு பார்ப்பவர்களை பயம் கொள்ளச்செய்வதென ஓரளவுக்கு திகிலை கூட்ட
மெனக்கெட்டு இருக்கிறார்கள் .கேமேரா கோணங்கள் இன்னும் மர்மத்தை
அதிகப்படுத்துகிறது .

women in black - விடாது கருப்பு !




Thursday, May 31, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் -தோற்கப்போவது யாரு ?


புதுக்கோட்டை இடைதேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது .திமுக ,மதிமுக ,பாமக,ஆகிய
கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையிலும் ,அதிமுக ,தேமுதிக ,இந்தியஜனநாயக கட்சி மற்றும்
பல உதிரிகட்சிகளும் களத்தில் நின்று புதுக்கோட்டையில் ஒரு திருவிழா எபெக்ட்டை தந்துகொண்டிருக்கிறார்கள் .

அந்த திருவிழா கோலத்திற்கு முழுமுதல் காரணம் ,நம் அதிமுக அமைச்சர்கள்தான்.தொண்டர்கள் படைசூழ
பவனி வரும் காட்சிகளை தினம் தினம் புதுக்கோட்டை வாசிகள் ரசித்துக்கொண்டும்,சகித்துக்கொண்டும் இருக்கிறார்கள் .
தொகுதி வேட்பாளருக்கு எந்த வேலையும் வைக்காமல் ,அமைச்சர்கள் தேர்தல் பணிகளை இழுத்துபோட்டுக்கொண்டு
செய்யும் விதத்தைப் பார்த்தால் ,கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றுகிறது .
சில அமைச்சர்கள் ,பன்னீர்செல்வத்துடன் மட்டுமே ஒட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது .
இந்த அசாதாரணமான சூழ்நிலையிலையும் அவர்களின் விளம்பர மோகம் கண்டு ஆச்சர்யப்படாத தொண்டர்களே இல்லை .

புதுக்கோட்டைவாசிகளுக்கு தினமும் குழாய் தண்ணீர் வருகிறது ,மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை ,ரேஷன்கடையில் கூடுதல்
மண்ணெண்ணெய் கிடைக்கிறது ,இந்த மாதிரியான அரும்பெரும் அதிசயங்களை அதிகாரிகள் செய்கிறார்களா? என்று தவறான
எண்ணம் வேண்டாம் ,நம் அமைச்சர்கள்தான் குழாய் தண்ணீர் திறந்துவிடுவதும் ,ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவதுமாக
ஒரு பேச்சு நிலவுகிறது .."மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 'என்று அமைச்சர்களின் முதலாளியம்மா அடிக்கடி சொல்வதன்படி  கேட்கிறார்கள் .
அப்படிப்பட்டவர்களுக்கு ,மக்கள் உரிய கைமாறு செய்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது .

மக்கள் ஆதரவு தருவதா முக்கியம்? , முதலாளியம்மாவின் ஒரு ஓரப்பார்வை அவர்களின் (அமைச்சர்கள் )மீது படவேண்டும் என்றே
இந்த வேலைகளை திறம்பட செய்து வருகிறார்கள் .அதிமுகவின் எடுபிடிகள் ,அப்பிரசன்டிகள் என்று  பொதுமக்கள்
அவர்களை வாழ்த்தினாலும் முகம் கோணாமல் செய்யும் பாங்கை கண்டு  ,மகாத்மா காந்தியிடம் கூட அந்த சகிப்புத்தன்மை இருக்குமா
என்ற சந்தேகம் எழுகிறது .

அப்படிப்பட்ட அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே கவலை ,அவர்கள் ஆதரிக்கிற அதிமுக  வேட்பாளர்தான் !இவ்வளவு உழைத்து ,களைத்து
வெற்றியை தேடித் தந்தாலும் இந்த புதுக்கோட்டை வேட்பாளர் என்ன கூறுவார் என்பதைக்கண்டே அவர்களுக்கு வருத்தம் .
அப்படி என்னதான் அந்த வேட்பாளர்(கார்த்திக் தொண்டைமான் ) கூறுவார் என்பதைத்தான் பார்ப்போமே !

இந்த இமாலய வெற்றிக்கு காரணம் ,மாண்புமிகு முதலமைச்சர் ,புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்கள்தான் .அவர்களுக்கு என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன் என்றே முழங்குவார் . வீட்டுக்கு வீடு பால் விநியோகம் கூட செய்தோமே ,நமக்கு அந்த பெயர் கிடைக்காமல் போய்விடுமே
என்ற கவலை , அமைச்சர்களுக்கு இப்போதே இருக்கும் என்று தோன்றுகிறது .

வெற்றிபெறுவது அதிமுக வேட்பாளர்தான் என்றாலும் ,தோற்பது சாட்சாத் ,நம்முடைய எடுபிடி அமைச்சர்கள்தான் .  #sosad

Wednesday, May 23, 2012

கிராமத்து சம்பவங்கள் !

சமீபத்தில் அறிந்த  இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன் !


வாழ வழியில்லாமல் இருந்த ஒருவன்,வெளிநாடு சென்று ஓரளவு காசு சம்பாதித்து ,மனைவிக்கு
அனுப்பி வைக்கிறான் ..எதுவுமே தெரியாமல் வாழ்ந்தவன் ,வெளிநாட்டு பகட்டு அவன் மீது
புதிதாக படிய ஆரம்பித்ததும் ,அவனுக்கு சுகபோகமாக வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது .
கிராமத்திற்கு வந்து சொந்த வீடு கட்டுகிறான் ,நகைகளை வாங்குகிறான் ..இவன் உழைப்பால்
உயர்ந்தவன் என்று ஊர் பாராட்டிக் கொண்டிருக்கையில் ,அவனுடைய மனைவி மட்டும் கவலையில்
உடைந்து கிடக்கிறாள் ..

என்ன விஷயம் என விசாரித்தால் ,அவளுக்கு ஒரு திருமணமாகாத தங்கை ஒன்று இருக்கிறது .
எந்நேரமும் இவளின் கணவன் அவளிடம் கொஞ்சுவதும் ,சிணுங்க விடுவதுமாக செய்து ,
அவளை கர்ப்பவதியாக்கி விடுகிறான்  .இதையறிந்த பொதுமக்கள்  பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் ..
ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்கிறார்கள் .என் மனைவிக்கு வயசாகிவிட்டது ,
அதனால் வேறு வழியில்லாமல் இதை செய்துவிட்டேன் என கூறுகிறான் .பஞ்சாயத்து பெருசுகள் ,
ரெடிமேட் தீர்ப்பை ஒன்றை வழங்குகிறது ..கற்பழித்தவனே திருமணம் செய்ய வேண்டும் என்ற
கொள்கைப்படி ,அவனின் மச்சினிச்சியை திருமணம் முடித்து வைக்கிறார்கள் . ..

மச்சினிச்சியை மாட மாளிகையில் வாழவைத்து ,தன் முதல் மனைவியை
நட்டாற்றில் விட்டுவிடுகிறான்  ..இதனால் மிகவும் பலகீனமடைந்த நிலைக்கு ஆளாகுகிறாள் தற்போது ,உடல்நிலை சரியில்லாமல்
படுத்த படுக்கையாக கிடந்து ,பழைய சந்தோஷ வாழ்க்கையை நினைத்துக்கொண்டிருப்பதாக அறிய முடிந்தது .
.
மற்றுமொரு சம்பவம் !

எந்நேரமும் குடி கும்மாளமுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் கிராமத்து  இளைஞனை நினைத்து 
அவனுடைய பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள் ..சரி திருமனம செய்துவைத்தால் 
சரியாகிவிடுவான் என நினைத்து ,அவனுக்கு திருமணம் முடிக்கிறார்கள் .
ஒருவகையில் ,அது கொஞ்சம் நல்ல பலனை கொடுத்தது .
கும்மாளத்தை விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டான் ..ஆனால் 
தமிழக அரசின் வருமானத்தை பாதிக்கும் என்பதால் குடியை மட்டும் விடவே இல்லை ..
குடும்ப வாழ்க்கையின் மூலம் மூன்று குழந்தை செல்வங்களை பெற்றான் ..
குடும்பம் பெருத்தது ,குடியும் பெருத்துப்போனது ..
இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத பெண் வீட்டார்கள் 
அவனுடன் சண்டை போட வேண்டிய துரதிஷ்ட நிலையும் வந்தது ..
பஞ்சயாத்தை கூட்டி நம்மை அசிங்கப்படுத்தி விட்டார்களே என எண்ணி ,,
குடிபோதையில் ,எலி மருந்தை குடித்து ..ஒரு லட்சத்திற்கும் மேல் 
பெண் வீட்டாருக்கு செலவு வைத்து விட்டு பரலோகம் சேர்ந்துவிட்டான் ..

இந்த இரண்டு சம்பவங்களிலும் ,பெண்களே பாதிக்கப்பட்டு இருப்பதை 
அறிய முடிகிறது ..கிராமத்திலும் நல்லொழுக்கம் குறைந்து வருகிறதென்பதையே 
இந்த சம்பவங்கள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது ..

இதுவும் கடந்து போகும் !

Sunday, May 20, 2012

அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் !


சமீபத்தில் ,ராமநாதபுரம் மாவட்டம் ,முதுகுளத்தூரில் ,விளையாடிக்கொண்டிருந்த  இரு வாலிப 
வயதுள்ள பையன்கள் ,துரதிஷ்டவசமாக  இடி தாக்கி ,இறந்தார்கள் .உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க  அரசாங்க டாக்டர்கள் இல்லாததால் ,இந்த  இறப்பு சம்பவம் பதியப்பட்டு இருக்கிறது .



பொதுவாகவே கிராமப் பகுதிகளில் ,அரசாங்க டாக்டர்களின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்க 
யாருமே முன் வருவதில்லை .இதை வசதியாக எடுத்துக்கொண்ட டாக்டர்கள் வாரத்தில் ,மூன்று நாள் மட்டுமே வருகிறார்கள் ..அதுவும் பாதி நாள்தான் வேலையே பார்க்கிறார்கள் என்பது மிக நீண்ட 
காலமாகவே நடக்கின்ற  ஒன்று ..

மற்ற நாட்களில் ,டாக்டர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் ,நீங்கள் இந்தியாவில் இல்லாதவராகத்தான் இருப்பீர்கள் .ஒவ்வொரு டாக்டர்களும் சொந்தமாக கிளினிக் வைத்துக்கொண்டு நாள் தவறாமல் உழைக்கிறார்கள் ..அந்த  உழைப்பில் சிறிய அளவாவது ,அரசு 
மருத்துவமனைகளில் காட்டினாலே போதும் ,நாடே சுபிட்ச  நிலை பெரும் ..

இடி தாக்கி இறந்த சம்பவத்தில் ,கொதித்தெழுந்த  பொதுமக்கள் ,சாலை மறியலில் ஈடுபட்டார்கள் ..
டாக்டர்களுக்கு தகவல் அனுப்பியும் வரவில்லை .. டாக்டர்கள் மேல் பொதுமக்கள் ஆத்திரத்தை 
காட்டிவிடுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தார்கள் .

ஆதிமுக  எம்எல்ஏ வும் ,சம்பிராதய  விசாரிப்பை ,நடத்தி முடித்து ,கழண்டுகொண்டார் ..நீண்ட நேரம் கழித்து 
அதிகாரிகள் ,சமாதனம் செய்து ..பொதுமக்களை  கலைந்து போக  செய்தார்கள் .



ஒரு பேருராட்சி அந்தஸ்தில் உள்ள ஊரில் ,அரசு மருத்துவமனியில் ஒரு டாக்டர் கூட இல்லாதது 
பொதுமக்களிடையே அதிருப்தியை  உண்டாக்கியுள்ளது .

Monday, May 14, 2012

HUGO (ஆஸ்கார் விருது வென்ற காவியம் )



ஐந்து விருதுகளை அள்ளிய ஹுகோ திரைப்படத்தை நெடுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காண
நேர்ந்தது .விஷுவல் காட்சிகள் ,மற்றும் படத்தொகுப்பில் கலக்கி எடுத்திருக்கிறார்கள் ஹுகோ படக்குழுவினர் .
இப்போதெல்லாம் ஒரு டிராமா கான்செப்ப்டில் படமெடுத்து ரசிகர்களை கவர்வது மிகவும் சிரமமான காரியம் .
அதையெல்லாம் உடைத்து சாமானியர்களை கவரும் விதத்தில் ஹுகோ அமைந்திருக்கிறது .

சிறுவயதிலேயே தாயை இழந்த ஹுகோ ,தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறான் .ஹுகோவின் தந்தை
கடிகாரம் செய்து கொடுக்கும் வேலையை செய்கிறார் .அப்படி வேலை செய்துகொண்டிருக்கும் போது ,எதிர்பாராத
தீ விபத்தில் உயிரிழக்கிறார் .இதையடுத்து ஹுகோவை உறவினர் ஒருவர் ,அவர் வேலை செய்யும் ரயில்வே நிலையத்தில் ,
கடிகார கூண்டில் உள்ள ரூமில் வைத்துக்கொள்கிறார் .சில நாட்களில் அவரும் காணாமல் போகிறார் .இதனால் யாருடைய
ஆதரவும் இல்லாமல் ரயில்வே நிலையத்திலேயே வாழ்ந்து வருகிறான்.அவனது அப்பா பரிசாக கொடுத்த ,ஒரு மெக்கானிக்
மிஷினை ரிப்பேர் செய்து ஓடவைக்க முயற்சி செய்கிறான் .அந்த மெஷினுக்கான சாவி (இதய வடிவிலான சாவி )மட்டும் தேவை என்ற நிலை
ஏற்படுகிறது .


இதனிடையே ஹுகோ ,கையில் போதிய பணமில்லாததால் உணவுகளை திருடி உண்பதை ,ரயில்வே நிலையத்தில்
வியாபாரம் பார்க்கும் ஒரு பெரியவர் கண்டுபிடித்து அவன் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை பிடுங்கிக் கொள்கிறார் .
அதை திரும்ப வாங்குவதற்காக ,அந்த பெரியவரின் வீட்டுக்கு வருகிறான் அந்த சிறுவன் .அங்கு இசபெல்லா என்ற
சிறுபெண்ணை பார்த்து ,தன் விஷயத்தை சொல்கிறான் .நான் புத்தகத்தை  வாங்கித்தருகிறேன் என்று உறுதிகூறுகிறாள்.
இதன்மூலம் இருவரும் நண்பர்களாகிறார்கள். தன்  அப்பா ,அடிக்கடி தன்னை சினிமாவுக்கு கூட்டிப்போவார் என்பதை
சொல்கிறான் ஹுகோ .இசபெல்லாவுக்கோ படமே பார்க்கக்கூடாது என்று  லில்லியின் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார் .
இதனால் இருவரும் படத்தை யாருக்கும் தெரியாமல்  பார்க்கச் செல்கிறார்கள் .இதனிடையே லில்லியின் கழுத்தில் ,அந்த இதய வடிவிலான சாவியைப்
பார்க்கிறான் ஹுகோ .அந்த சாவியை வைத்து ,அந்த மெஷினை இயக்குகிறான்.அந்த மெஷின் ஒரு படத்தை வரைந்து ,
படத்தின் கிழே ஒரு சினிமா  இயக்குனரின் பெயரை எழுதுகிறது .

ஹுகோவுக்கு ஆர்வம் ஏற்பட்டு ,இசபெல்லாவின்  பாட்டியிடம் அதை கேட்கிறான் .லில்லியின் பாட்டி ,ஆரம்பத்தில் பயந்து ஹுகோவை
கண்டிக்கிறாள் .இதனால ,ஹுகோவும் ,லில்லியும் நூலகத்திற்கு சென்று அந்த இயக்குனரைப் பற்றிய குறிப்புகளை
தேடுகிறார்கள் .ஒரு புத்தகத்தை  பார்த்துக்கொண்டிருக்கும் ,அந்த புத்தகத்தை எழுதிய ஒருவர் ,அவரைப் பற்றிய விபரங்களை
கூறுகிற போது ,ஹுகோவும் ,லில்லியும் ஆச்சர்யமடைகிறார்கள்.அந்த இயக்குனர் வேறு யாறுமல்ல ,ரயில்வே நிலையத்தில் வியாபாரம்
பார்க்கும் பெரியவர்தான் ,அதாவது இசபெல்லாவின் தாத்தா !அதுவுமில்லாமல் ,ஹுகோ வைத்திருக்கும்
அந்த மெக்கானிக் மெஷினையும் இசபெல்லாவின் தாத்தாதான் உருவாக்கினார் என்ற தகவல் தெரிகிறது .


ஒரு இயக்குனராக இருந்து ,பின் ஏன் தனிமையில் ஒதுங்கினார் என்பதை  பின்பாதியில் சொல்கிறார்கள் .இதுதான் ஹுகோ
படத்தின் திரைக்கதை .காட்சிப்படுத்துதலை வெகு சிறப்பபாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு இது முதல் படமென்பது
ஆச்சர்யம்தான் .

அது போல ஒளிப்பதிவு இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது ,ஒரே காட்சியை .பல ஆங்கிளில்
காட்டுகிற ஒன்று பிரமிக்கத்தக்கது .இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ,ரயில்வே இன்ஸ்பெக்டராக வரும்
நபர்தான் .அவர் முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டதால் ஒரு கால் ஊனமாக இருந்தாலும் ,அவர் சிறு குழந்தைகளை
தனியாக கண்டாலே ,கடுப்புடன் ,அவர்களை அனாதை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறார்.நம் ஹுகோவும் அடிக்கடி
மாட்டிக்கொண்டு பின் ஒருவழியாக தப்பிக்கிறார்.அந்த ரயில்வேஇன்ஸ்பெக்டருக்கும் ,அங்கு பூ விற்கும் ஒரு பெண்ணின்
மீது காதல் ,ஆனால் அவரின் முரட்டு சுபாவம் காதலுக்கு ஒத்து வராமல் தடுமாறும் எக்ஸ்ப்ரெஸன் அபாரம் .துறு துறு
சுட்டிப்பையன் ஹுகோவின் இயல்பான நடிப்பு கதையுடன் ஒன்றச் செய்கிறது .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலத்தில் நடைபெறும் கதை என்பதால் ,நுணுக்கமாக ஒவ்வொரு
விசயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள் .கலை நேர்த்தியில் இந்த திரைப்படம் ஒரு மைல் கல்...கடைசியில் ஹுகொவின்
அபார அறிவு நுணுக்கத்தைக் கண்டு ,அந்த பெரியவரே தன்னுடன் வைத்துக்கொள்வதோடு படம் நிறைவுபெறுகிறது .நாவலை
படமாக எடுத்திருப்பதால்  திரைக்கதையில் கொஞ்சம்  தொய்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது.

ஹுகோ -அழகான படைப்பு !





Saturday, May 12, 2012

ஜெயலலிதாவின் ஓராண்டுகால கற்கால ஆட்சி !



ஆதிமுக அரசு பதவியேற்று ஓராண்டை எட்டியிருக்கிறது ,அதன் அரும் பெரும் சாதனைகளை
பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம் .பதவியேற்ற முதல் மாதத்திலேயே ,எதிர்கட்சிகளுடன் வழக்கம்போல் சண்டைபோடுவாரென
பலரும் எதிர்பார்த்தபோது ,அதையெல்லாம் விட்டுவிட்டு ,பள்ளிக்குழந்தைகளுடன் சமச்சீர் சண்டை போட்டு
வரலாறு படைத்தார் .

அடுத்ததாக நிலமோசடி வழக்குகள் !ஆரம்பத்தில் திமுக கொள்ளைக்கும்பலிடம் இருந்து நிலத்தை பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுத்தாலும் ,பாதி வழக்குகள் ,திமுக புள்ளிகளுக்கும் ,போலிஸ் மாமாக்களுக்கும் நடக்கும் அன்டர்டீலிங்கில்
வழக்குகள் வத்தலாகிப் போனதுதான் மிச்சம் .

இரையை எப்போது பிடிக்கலாமென காத்திருக்கும் நரியைப் போலத்தான் ,கழக அரசும்
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் ,தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது .பால்விலை உயர்வு ,பேருந்துக்கட்டண உயர்வு என்ற
கொடிய பிரமாஸ்திரத்தை மக்கள் மீது ஏவி தன் இரைப்பசியை கொஞ்சமாக தீர்த்துக்கொண்டது .இதற்கு விளக்கம்கேட்கப்
போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்து விஷயத்தை திசைதிருப்பி சாதனை படைத்தது .


இடையே ஒரு மன்னார்குடி  விளம்பர டிரைலர் வேறு மக்களை திசைதிருப்ப
ஓட்டினார் .ஆருயிர் தங்கை சசிகலாவினுடனான ஊடல் நாடகம் அரங்கேறி ,
சில கைதுப் படலங்கள் நடந்தேறி ,பின் ஆருயிர் அக்காவுக்கு கடிதம் எழுதி
முடிக்கப்பட்ட டிரைலரை கண்டு வியக்காத மனிதர்களே இல்லை .சரி ,அவர்களது  குடும்பப் பிரச்சினை ,விட்டுவிடலாம் .


அதற்கு அடுத்த வாரம் ,நூலக இடமாற்றம் என்ற உயர்ந்த கொள்கையை அரசு வெளியிட்டது .நூலகத்தை மாற்றி மருத்துவமனை
,சட்டமன்ற புதிய கட்டிடத்தை மாற்றி மருத்துவமனையென ,இஷ்டத்திற்கு அரசாணையை வெளியிட்டது தமிழக  அரசு .நாட்டில்
மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை ,டாக்டர்களுக்குத்தான் பஞ்சம் என்ற நிலையில் ,மேலும் இரண்டு மருத்துவமனைகள்
கட்ட முடிவெடுத்த அரசின் சாதனையை விவரிக்க வார்த்தையே இல்லை .

அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத ,மின்வெட்டு கடாயுதத்தை மக்களின் நடுமன்டையில் நச்சென அடித்த அரசு ,அடித்துக்கொண்டிருக்கும்
அரசை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை .சரத்குமார் ,கிருஷ்ணசாமி இவர்கள் இருவரைத் தவிர அத்தனை மக்களும்
தமிழக அரசின் இந்த மின்வெட்டு சாதனையை பற்றி வண்டை வண்டையாக  அரசைப் புகழ்ந்து போஸ்டர்கள்,
ஊர்வலங்கள் நடத்தி அரசை முறையாக கவுரவித்தார்கள் தமிழக பொதுமக்கள். இது போன்ற அரிய சாதனையை
மற்ற மாநிலங்கள் நெருங்கவே முடியாதென்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது .




மின்சாரம் இல்லாத வேளையில் மின்கட்டணத்தை உயர்த்து என்ற உயர்ந்த கொள்கையை அடுத்து கொண்டுவந்த தமிழகஅரசின்
நிர்வாகத் திறமையை கண்டு ,மக்கள் பேச்சு மூச்சில்லாமல் நிற்கவைத்த அரசு இன்னும் பலசாதனைகள் புரிய
கண்ணீருடன் வாழ்த்துகிறார்கள் .

இப்போதுதான் ஓராண்டு முடிந்திருக்கிறது ,இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே, மக்களின் துயர் துடைக்க .!
நிச்சயமாக,  துடைத்து எரியாமல் விடமாடார்கள் ,என்பதை நாங்கள் நம்புகிறோம். ,ரத்தத்தின் ரத்தங்களும் ,ரத்தம் சிந்தி
உழைக்கும் பொதுமக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து  சாதனை செய்த தமிழகஅரசை, வாழத்த
நம் வறுமை தடுப்பதால் ,மீண்டும் மேன்மக்களாகிய சரத்குமாரையும் ,கிருஷ்ணசாமியையும் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Wednesday, May 9, 2012

MISSION IMPOSSIBLE 4 (அட்டகாச ஆக்சன் சினிமா')



ஒரு இரண்டரை மணி நேரம் கிடைத்தால் ,நாம் உடனே யோசிக்கத் தோன்றுவது ,ஒரு நல்ல பொழுதுபோக்கு
சினிமாவைத்தான்.. நம்மை யோசிக்க வைக்காதவாறு ஆட்டிப் படைக்கும் விறுவிறுப்பு திரைக்கதையுள்ள
திரைப்படத்தைத்தான் அதிகம் எதிர்பார்ப்போம் ,அப்படி உங்களுக்கு நேரம் கிடைத்தால் ,கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்
MISSION IMPOSSIBLE 4 !


படத்தின் முதல் அமெரிக்க உளவாளியிடமிருந்து ஒரு ரகசிய கோட் திருடப்படுகிறது .இதனால் அவர்களின்
திட்டம் அம்போவென பாதியில் நிற்கிறது ..அந்த ரகசிய கோட் டை திரும்ப பெற்றுக்கொள்வதற்காக டாம்கிருஸ்சை
ரஷிய ஜெயிலில் இருந்து கொண்டுவருகிறார்கள் ..
அந்த ரகசிய குறியீட்டால் ,அணு ஆயுதத்தை எதிரிகள் ஏவப்போவதாக டாம்கிருஸ் குழு தெரிந்துகொள்கிறது ..
அதை தடுக்க ஒவ்வொரு முறை முயற்சிக்கும்போதும் நிறைய தடங்கல்கள் ஏற்படுகிறது ,இறுதியில் எதிரிகளின்
திட்டத்தை டாம்க்ரூஸ் ஏஜன்ட் குழு முறியடித்ததா என்பதே மிஷன்இம்பாசிபில் திரைபடத்தின் கதை ..


ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் நம்மையறியாமல் அந்த கதைக்குள் ஈடுப்பாட்டுடன்
பயணிக்க முடிகிறது ..டாம் க்ரூஸ்ஸின் வெயிட் மட்டும் கொஞ்சம் கூடியிருக்கிறது ..மற்றபடி ஆக்சன் காட்சிகளில்
அதே பழைய வேகம்தான் .பெரும்பான்மையான காட்சிகளில் ,தொழில்நுட்ப யுக்தியை நிறைய பயன்படுத்தியிருக்கிறார்கள் ..
என்னைப் போன்ற சராசரி தமிழனுக்கு ஆச்சர்யத்தையையும்
துபாயின் மிக உயர கட்டிடத்தில் டாம்க்ரூஸ் ஏறும்போது  அச்சத்தையும் ஏற்படுத்துகிறது ..


கண்களில் மாட்டும் லென்ஸ் மூலம் ஸ்கேன் பண்ணும் டெக்னாலஜி நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை ..
அதிலும் அந்த லென்ஸ் மூலம் பிரின்ட்அவுட் எடுத்துக் கொடுப்பது எல்லாம் டூமச்சாக தெரிந்தாலும் ,கதையின் போக்குக்கு
இந்த லாஜிக் இல்லா காட்சிகள் நன்றாகவே உதவுகிறது .டாம்க்ரூஸ்ஸின் குழுவில் உள்ள மூன்று பேரும்
ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொள்வது வழக்கமான ,தவிர்க்கமுடியாத அம்சமாகிறது .
அணில்கபூர் கிளைமாக்ஸ் சீனில் சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .ஒரு ரஷிய கட்டடத்தை வெடி வைத்து 
தவிர்க்கும் எதிரியின் பிளானிங் பிரம்மாண்டம் .

மொத்தத்தில் ,யோசிக்காமல் பார்க்கவேண்டிய பொழுதுபோக்கு டமாக்காதான் இந்த மிஷன் இம்பாசிபில் 4  !





Monday, May 7, 2012

வழக்கு எண் 18/9 (சினிமா விமர்சனம் )


ஏழ்மையில் நிலையில் இருக்கும் ஒருவன், சந்திக்கும் காதலும் ,அதன் எதிர்பாராத தாக்கமும்தான் கதையின் மையக்கரு .
செய்தித் தாள்களில் ஒருவரி செய்திகளில் அடிபடும் சம்பவங்களையே திரைப்படமாக எடுத்து வரும் பாலாஜிசக்திவேல்
இந்த வழக்கு எண் திரைப்படத்தையும் ,செய்தியின் அடிப்படை கருவை மட்டும் எடுத்து மெருகேற்றி ,அழகாக தந்திருக்கிறார் .



முதல் காட்சியிலேயே ,ஒரு பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியதால் ,அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் .
அதை காவல்துறை விசாரிக்கிறது ..அதிலிருந்து கதை பயணிக்கிறது ..


கதையின் முதல் பகுதி :


கதையின் நாயகனுக்கு,வறுமையால் சிறு வயதிலையே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ,வடமாநிலத்தில் கடும்
வேலை செய்யும் நேரத்தில் ,நாயகனின் அப்பா ,அம்மா இறக்கிறார்கள் .அனாதையாக ஆகும் நாயகன் ,சென்னைக்கு வருகிறார் .
அங்கு பாலியல் தொழில் செய்யும் ,ரோசி என்ற அக்காவின் மூலம்,பிளாட்பார உணவகத்தில் வேலைக்கு சேர்கிறான் .
இந்த நேரத்தில் ஜோதி என்ற பெண்ணை பார்க்கிறான் .ஆரம்பத்தில் முட்டல்,மோதலுடன் சென்று ,ஒரு கட்டத்தில்
ஜோதி மீது காதலில் விழுகிறான் ,ஆனால் ஜோதிக்கு இவனை கண்டால் ஆவதில்லை ...இந்த நேரத்தில் போலிஸ் அவனை
ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறது


கதையின் இரண்டாம் பகுதி :

ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் ,ஆர்த்தி என்ற பிளஸ்2 மாணவி இருக்கிறாள் ,அவளை பணக்கார வீட்டுப் பையன்
டாவடிக்கிறான்..முதலில் பாடத்தில்  சந்தேகம் கேட்பது போல உள்ளே வந்து ,ஆர்த்தியுடன் அறிமுகமாகி
கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அந்தரங்களை படமெடுத்து ,நண்பர்களிடம் காட்டி வருகிறான் ..இதை ஒருகட்டத்தில் அறிந்துகொள்கிற
ஆர்த்தி ,அவனை விட்டு விலகுகிறாள் ..
காரியம் கெட்டுவிட்டதேயென ஆத்திரப்பட்டு ,அவளின் வீட்டிற்கு சென்று ஆசிடை ஊற்றுகிறான் .ஆனால் ,வேலை பார்க்கும்
ஜோதி மீது ஆசிட் பட்டு ,ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கிறார்கள் ..

ஆர்த்தி காவல்நிலையத்தில் உண்மையை சொல்லிவிடுகிறாள் ..பணக்காரப் பையனின் அம்மா ,மினிஸ்டரின்
கீப்பாக இருப்பதால் ,கேஸை ஜோடித்து திசை திருப்புகிறார்கள் ,காவல் துறையினர் ..இறுதியில் என்ன நடந்தது
என்பதுதான் வழக்கு எண் திரைப்படத்தின் திரைக்கதை சுருக்கம் .

காட்சிப்படுத்துதலில் பாலாஜி சக்திவேல் ,உலகப்பட யுக்தியை கையாண்டிருக்கிறார் .கேமெரா கோணமாகட்டும்,
ஒரு காட்சியின் பினிஷிங் ஆகட்டும் ,எல்லாமே நிறுத்தி நிதானமாக செய்யப்பட்டவை என்பது தெளிவாக தெரிகிறது .
தன் முந்தைய படமான கல்லூரி போல் ,சொதப்பலாக ஆகிவிடக்கூடாது என்ற மெனக்கெடல் தெரிகிறது ..
எல்லாமே புதுமுகங்கள் என்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ் .புதுமுகங்களை வைத்து படமெடுப்பது என்பது
கத்திமுனையில் நிற்பது போன்று ..அதை திறம்பட செய்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு சிறப்பு பாராட்டுக்கள் ..நிச்சயம்
விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கலாம் ..





நாயகன் ,சாப்பிட வழியில்லாமல் மயங்கிக் கிடக்கும்போது ரோசி என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்மணி ,இட்லி
வாங்கிக் கொடுத்து ,வேலைக்கு சேர்த்துவிடும் ,அந்த காட்சியில் அந்த பெண்மணி போன திசையையே பார்க்கும் அந்தக்
காட்சி மிகச்சிறப்பு ..
அது போல ,நாயகனின் கூடவே வேலை செய்யும் பொடிப்பையன் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது
பாலாஜிசக்திவேலின் இந்த மாதிரி புதுமுகங்களை படத்தில் அறிமுகப்படுத்தும் போக்கு நிச்சயம் பாராட்டதக்கது .
இசை என்று பெரிதாக இந்த படத்தில் தேவையில்லை என்பதால் ,அடக்கியே வாசிக்கப்பட்டிருக்கிறது .
காவல்துறை வழக்கை ஜோடிக்க செய்யும் கேன்வாஸ் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது .
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதையின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது ..
கதையை மேலும் நீட்டிக்காமல் ரத்தினச் சுருக்கமாக படத்தை முடித்த விதமும் பாராட்டுக்குரியது .
நடைமுறையில் ஒரு பெண் துணிந்து செய்வாளா என்ற கேள்வியை கூட கேட்கமுடியாதபடி
செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ..

வழக்கு எண் 18/9- மக்கள் மன்றத்தில் ஜெயித்துவிடுகிறது .




Monday, April 30, 2012

THE DARKEST HOUR (ஹாலிவுட் விமர்சனம் )


திடீரென மர்மமான ஜந்துக்கள் ,விண்வெளியிலிருந்து இறங்கி நம்மை தாக்கினால் எப்படியிருக்கும் ?
என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த DARKEST HOUR திரைப்படம் .



ஒன்றரை மணிநேர விறுவிறுப்பு திரைப்படத்தை உருவாக்கிய விதத்தில் DARKEST HOUR
ஓகே ரகம்தான் .இனி சுருக்கமான திரைக்கதையை பார்க்கலாம் ..

அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் ,ஒரு பிராஜக்ட் விசயமாக வரும் இரண்டு
பையன்கள் ,இவர்களுக்கு  ரஷ்யாவின் மொழி ,வழி என எதுவுமே தெரியாமல் இருக்கிற நேரத்தில் விண்வெளியிலிருந்து
வேற்று கிரக ஜந்துக்கள் இறங்கி ஒட்டுமொத்த மக்களையும் பஸ்மமாக்குகிற நேரத்தில் உயிரை கையில் பிடித்து ஒரு
ரூமில் தங்குகிறார்கள் .ஐந்து நாட்களுக்குப் பிறகு ,இதற்கு மேல் ரூமில் அடைந்து கிடக்க முடியாதென முடிவெடுத்து
வெளியே வருகிறார்கள் .ஜந்துக்கள் இன்னும் ரஷ்யாவை விட்டுப் போகவில்லை என்பதை உணர்ந்து ,வேறுவழியில்லாமல்
அதை எதிர்க்க துணிகிறார்கள் .இறுதியில் அதை எதிர்த்து வெற்றி கண்டார்களா என்பதே THE DARKEST HOURன் திரைக்கதை .

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை அறிவியல் அறிவு வேண்டுமென்பதை ஓரளவுக்கு இந்த படத்தில்
புரிய வைக்கிறார்கள் .பல முனைகளிலிருந்து தாக்கினால் எவ்வளவு பலமுள்ள எதிரியும் காலிதான்
என்ற ரீதியில் வேற்றுகிரக ஜந்துக்களை விரட்டியடிக்கும் பாணி தமிழ் சினிமாவை பார்த்து எடுக்கப்பட்டதோ என எண்ணத்தோன்றுகிறது




இந்த நால்வருடன் சில ரஷ்ய ஆட்களும் இடையில் சேர்ந்து எதிர்த்து போராடும்போது ,ரஷ்யர்கள் தன்னுடைய நாட்டை
மீட்டாக வேண்டுமென டயலாக் அடிப்பது நன்றாகவே எடுபடுகிறது .கிராபிக்ஸ் யுக்திகள் ஏற்கனவே பார்த்து
பழக்கப்பட்டதுதான் என்றாலும் ,வேற்று கிரக வாசிகள் பூமியில் உள்ள உயிர்களை தேடித் தேடி கொல்லும் பாணி புதியதுதான் .பின்னணி இசை மிரட்டும்
பாணியில் உள்ளதால் ,படத்தில் ஆர்வத்துடன் ஒன்ற முடிகிறது .

THE DARKEST HOUR _ த்ரில்லர்  பொழுதுபோக்கு !




Sunday, April 29, 2012

பிஜேபி எழுச்சி பெறுமா ?



மதுரையில் நடைபெறப்போகும் பாஜகவின் பிரம்மாண்டமான மாநில மாநாடு ,பாஜகவுக்கு தமிழகத்தில்
பெரிய மாற்றத்தை கொடுக்கலாம் என்ற எண்ணம் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல பாஜகவினர்
நினைக்கின்றனர். அவர்களது நினைப்பு ,நல்ல பலனை கொடுக்குமா என்பதை குறித்துப் பார்ப்போம் ..

பாஜகவின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அத்வானி ,நரேந்திரமோடி ,நிதின்கட்காரி உள்ளிட்ட
பல தலைவர்கள் அவ்வப்போது தமிழகத்தில் வந்து ஒரு சில நாட்கள் தங்கி கட்சிப் பணிகள்,மற்றும்
பிரச்சாரங்களை செய்த போதும் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் அரை சதவிகிதம் கூட உயரவில்லை
என்பதுதான் கசப்பான உண்மை .98,99களில் இருந்த பாஜகவின் வேகம் தமிழகத்தில் இப்போது இல்லை.
இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தொண்டர்கள் அவ்வப்போது நாங்கள் பாஜகவினர் என்று
சொல்லும்போது நம்மையும் அறியாமல் ஆச்சர்யப்பட்டதுண்டு .

தமிழகத்தில் மத்தியில் பாஜக வரவேண்டும் என்ற பொதுவான மனநிலை மக்களிடத்தில் இருந்தாலும்
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓட்டளிக்க தயக்கம் காட்டியே வந்திருக்கிறார்கள் .இந்த நிலைமையில்
மதுரை மாநாட்டில் வைத்து ,தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் ? என்ற உயரிய கொள்கையை
முழங்கப் போகிறார்கள் என்ற செய்தி அடிபடுகிறது .ஒவ்வொரு கட்சிக்கும் தன் கட்சி ஆட்சிக்கு
வருவதென்பது  முக்கியமென்றாலும் ,பாஜகவின் லட்சியம் எந்த வகையில் சாத்தியப் படப்போகிறது
என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும் .




புதுப்புது கட்சிகளுக்கு கூட திராவிட கட்சிகள் கூட்டணிக்' கதவை திறந்துவிடும் வேளையில்
பாஜகவுக்கு மட்டும் தமிழகத்தில் கூட்டணிக்கான அனுமதியை கொடுக்க தயங்குகிறார்கள் .இருந்தும்
பாஜகவினர் தளராமல் தேர்தலில் போட்டியிடும் தைரியம் ஒன்றை அனைத்து மக்களும் மெச்சுகிறார்கள்.
மத்தியிலும் பாஜகவுக்கு கூட்டணி சரியில்லை என்றபோதிலும் மக்கள் ஒருமனதாக காங்கிரஸை
ஒதுக்கி பாஜகவை ஆதரிக்கும் பாங்கு தமிழகத்தில் வருமா என்பதுதான் தற்போதைய கேள்வி !

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ..மதுரையில் நடக்கப்போகும் மாநாட்டில்
பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது .இதைவைத்து
பஜாகவினருக்கு ஆதரவு பெறுகுகிறது என்று பாஜகவினர் திருப்தி பட்டுக் கொள்ளலாம் .
ஆனால் மதுரையை சுற்றி உள்ள மக்களுக்கோ ..பிரம்மாண்டமான செட்டுகளை கண்டுகளித்து ,உணவுகளை இலவசமாக ருசிபார்த்து
பொழுதை போக்கலாம் என்ற ஆசை இப்போதே வந்துவிட்டது என்பதை நாமும் புரிந்துகொள்ளலாம் .


Thursday, April 26, 2012

கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு !



நல்ல செயல்பாடுகளின் மூலம் அரசியல் செய்வது ஒரு வகை ,வெறும் வார்த்தை ஜாலத்தை
மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது மற்றொரு வகை ..அந்த வாய்ஜால வகையைத்தான்
நம் தமிழின தலைவர் ,கடந்த இருபது வருடமாக வெகுசிறப்பாக செய்து வருகிறார்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியபோது ,அவர் வெளிப்படுத்திய அறிக்கையே சொல்லிவிடும் ,அவரின்
இயலாமையை ..தமிழீழம்தான் தமிழ் மக்களின் இறுதித் தீர்வு என்ற லட்சியத்தை நோக்கித்தான் எமது கட்சி
செயல்பட்டு வருகின்றது என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
பதவியில் இருந்தபோதும் இதையே நான் சொல்லியிருக்கிறேன் என்றுவேறு மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அதாவது பதவியில் இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி ,வெறும் வாய்சொல்லை கட்டிக்கொண்டு
மாரடிப்பனே ஒழிய , செயல்பாடுகளை காட்டி யார் பகையையுயம் வளர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற கூற்று
அவர் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது .
இப்படிப்பட்ட  உயரிய கொள்கையை உடைய நம் கருணாநிதியின் அறிக்கையை நினைத்து உடன்பிறப்புகளே
நகைக்கும் அளவுக்கு போய்விட்டது என்பதை கருணாநிதி இன்னுமா அறியாமல் இருக்கிறார்? என்ற ஐயம் ஏற்படுகிறது .

ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் ,காங்கிரசின் கால்களில் விழுந்திருந்த
கருணாநிதி இலங்கை விவகாரத்தை மக்கள் மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது அடிக்கும்
அறிக்கை ஸ்டன்ட்தான் நேற்றைய கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை என்பது இலங்கை மக்களுக்குக் கூட தெரிந்திருக்கும்

கிராமத்தில் ஒரு சொலவடை ஒன்றை நான் கேள்விப்பட்டதுண்டு ..."வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது "
அந்த சொலவடை கருணாநிதிக்கு நன்றாக பொருந்துகிறது .

Tuesday, April 10, 2012

ocean's thirteen (ஹாலிவுட் சினிமா )


ஒசென்ஸ் 11,ஒசென்ஸ் 12 ஆகிய படங்களின் வரிசைப் பட்டியலில் கடைசிப் படம்தான் ஒசென்ஸ் 13.
கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்ற படங்களை சீரியஸ் தன்மையில் பார்த்து ,பழக்கப்பெற்ற நமக்கு,
நகைச்சுவை கலந்து ,லாஜிக் மீறாமல் ஒசென்ஸ் 13 படத்தை எடுத்திருப்பது ஒரு புதிய பாணிதான் .
இனி கதையின் சுருக்கம் ....



ரியுபனின் இடத்தை  ,வலுக்கட்டாயமாக ஏமாற்றி வாங்குகிறார் வில்லி பேங்க்.அங்கு  பெரிய சூதாட்ட விடுதியை  கட்டுகிறார் வில்லிபேங்க்.
 இதனால் ரியுபன்  நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு பெட்ரெஸ்டில் இருக்கிறார் .அவரின் சிஷ்யர்களான ஜார்ஜ்க்லூனி, மற்றும்
பிராட் பிட் குழுவினர் ,ரியுபன் ஏமாற்றபட்டதற்கு பழிவாங்க ,அந்த சூதாட்ட விடுதியை கொள்ளை அடிக்க
முடிவெடுக்கிறார்கள் .
அதன்பின் ஒவ்வொருவரும் ,அந்த ஹோட்டலின் ஒவ்வொரு பிரிவையும் நோட்டமிட்டு ,விஷயத்தை சேகரிக்கிறார்கள்.
இதனிடையே ,கொள்ளை அடிக்கும் பிளானில் ,பூகம்ப அதிர்வை உண்டாக்கக்கூடிய மிஷின் சொதப்ப, வேறு  மிஷின் வாங்க
பணம் தேவைப்படுகிறது .பெனடிக்ட் என்பவர் பணம் தர,ஒரு கண்டிஷனுடன்  முன்வருகிறார் .சூதாட்ட விடுதியில் ,உள்ள
நான்கு வைர நெக்லஸ்களை ,எடுத்து வரவேண்டுமென கண்டிஷன் போடுகிறார் .ஜார்ஜ்க்லூனி குழுவினர் ஒருவழியாக சம்மதிக்கிறார் .

அதன் பின் ..ஒவ்வொருவராக விடுதிக்குள் சென்று செய்யும் அட்டகாசங்கள்தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் காட்சிகள் .
வில்லி பேங்கின் ஸ்டெனோவை கரெக்ட் செய்யும் காட்ச்சியில் ,மேட்டேமென் செய்யும் வித்தை காமெடி  ரகம். சூதாட்ட டைஸ்கள்
தயாரிக்கும் இடத்தில் ,ஜார்ஜ்க்லூனி ஆட்கள்  ,கெமிக்கல் கலவையை கலந்து , டைஸ்களை தங்களுக்கு ஏற்ப தாயாரித்து  ,சூதாட்ட விடுதியில்
செய்யும் ஜிம்மிக்ஸ் அட்டகாசம்தான் .


கடைசியில் வில்லிபேங்க் ,ஒன்றும் செய்வதறியாமல் நிற்க.... கண்முன்னே அத்தனையையும் சுருட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள் சூதாட்டகுழுவினர் .
படத்தில் பதிமூன்று பேரும் ,ஒவ்வொரு பகுதியில் இருந்து செய்யும் தொழில்நுட்ப ஹாக்கிங்..நம்மை வியக்கவைக்கிறது .கொள்ளையர்களின் படங்களை ,அமெரிக்க போலீசார் கண்டுபிடித்து ,வில்லிபேங்க்குக்கு
ஈமெயில் அனுப்பும்போது ,அதையும் வழிமறித்து புகைப்படங்களை மாற்றும் யுக்தி நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை .காமெடி ,த்ரில்லர் ,ரொமான்ஸ்
என்று அத்தனையையும் ,சரிவிகிதத்தில் கலந்து தந்த இயக்குனர் ,ஸ்டீவனின் திறமையை வெளிப்படுத்துகிறது இந்த ஒசென்ஸ் 13.





Sunday, April 8, 2012

ஒரு கொலையும் ,கொலையின் பின்னணியும்


கடந்த வாரம் வெளியான ஒரு செய்தியும் ,அதன் அதிர்ச்சி பின்னணியும் 
இங்கே தந்திருக்கிறேன் ..




கர்ப்பத்தை கலைக்க முடியாததால் காதலியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.   ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 24). இவர் சம்பவத்தன்று மர்மமான முறையில் கடலாடி ஊரணியில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாக்கிய லட்சுமியை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமியும், மேலக் கடலாடியை சேர்ந்த பரசுராமன் மகன் கார்த்திக் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் பாண்டியனை பிடித்து போலீசார் கிடுகிப்பிடி விசாரணை நடத்தினர்.   கார்த்திக் பாண்டியன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பாக்கியலட்சுமியும், நானும் காதலித்து வந்தோம். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம். எனவே கருவை கலைக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. எனவே பாக்கியலட்சுமியை சம்பவத்தன்று கடலாடி ஊரணிக்கு வரவழைத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இதற்கு உடந்தையாக எனது நண்பர்கள் காளிதாஸ், குமரன் ஆகியோர் இருந்தனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பினோம் என்றார். இதையடுத்து கார்த்திக் பாண்டியனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த காளிதாசையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமரனை தேடி வருகின்றனர்.


இந்த செய்தியில் பல வெளிவராத விசயங்களை பார்ப்போம் ..



கொலையாளியான இந்த காதலன் ,இதுவரை பல பெண்களை 
உல்லாச வலையில் வீழ்த்தி வந்திருப்பதாக சொல்கிறார்கள் ..கொல்லப்பட்ட இந்த பெண் 
கொலையாளியின் இன்னொரு தொடர்புப் பெண்(திருமணமாகி கணவரைப் பிரிந்து இருப்பவள் ) மூலம் பழக்கமாகி இருக்கிறாள் .அந்தப் பெண்தான் 
இவனுடன் பழக்கத்தை ஏற்படுத்த துணை புரிந்திருக்கிறாள்.இதெல்லாம் காவல்துறையின் 
தீவிர விசாரணையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தொடர்பான  பெண்தான் ,இந்த மூன்று பேரையும் 
போலீசாரிடம் காட்டிக் கொடுத்திருக்கிறாள்.

கொலையாளியின் கூட்டாளிகள் ,மது அருந்தி விட்டுத்தான் இந்த காரியத்தில் இறங்கினார்கள் 
என்று அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .கொலையாளியிடம் அந்தப் பெண் ,ஏற்கனவே 
சில நகைகளை பறிகொடுத்து இருக்கிறாள் .இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் 
,நகையை திருப்பி கேட்ட நேரத்தில்தான் ,இவர்கள் இந்த கொடும் காரியத்தை புரிந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் , கொலையாளியின் கூட்டாளி 
பிடிபடுவதற்கு முன்பு ,இப்படி சொல்லியிருக்கிறான் .

"நாட்டுல அநியாயம் பெருகிப்போச்சு "!

பிரபலமான பதிவுகள்