Loading

Thursday, January 19, 2012

மவுனகுரு (சினிமா விமர்சனம் )



பொதுவா பலருக்கு ,திரைப்படம் ஆரம்பித்த உடனே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என நினைப்பார்கள் ,நானும் அந்த ரகம்தான் .
அந்த வகையில் மவுனகுரு திரைப்படத்தை ,கதையுடன் ஆரம்பிக்க வேண்டுமென்றால் ,படத்தின் நாற்பதாவது நிமிடத்தில் இருந்து பார்க்கத்
தொடங்கலாம் ,முதல் நாற்ப்பது நிமிடம் ,நீங்கள் படம் பார்க்காவிட்டாலும், கதையின் மையக்கரு உங்களுக்குப் புரிந்துவிடும் .நாற்பதாவது நிமிடத்தில்
ஆரம்பிக்கும் விறுவிறுப்பான திரைக்கதைதான் இந்த படத்தின் முக்கிய அம்சம் .

இனி கதையை பார்க்கலாம் ,

நான்கு போலீஸ்காரர்கள் ,ஹைவேஸ் சாலையில் இருக்கிறார்கள் ,படு வேகமாக ஒரு கார் ,அவர்களை கடந்து சென்று ,நிலை தடுமாறி சிறு பாலத்தின் மீது
மோதி விபத்துக்குள்ளாகிறது. நான்கு போலீஸ்காரர்களும் ,விபத்தான காரை பார்க்கிறார்கள் ,கார் டிக்கியில் கோடிக்கணக்கான
பணம் இருக்கிறது ,வழக்கம்போல் போலீஸ்காரர்களுக்கு சபலம் தட்டுகிறது ..காரின் உள்ளே இருந்தவனை கொன்றுவிட்டு
பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

கார் விபத்தில் பலியானவன் என்று போஸ்ட்மோடம் ரிப்போர்ட் தயாரிக்கச் சொல்லி ,நான்கு போலிஸ்காரர்களில் ஒருவர்,ஹோட்டலில் இருந்து உத்தரவிடுகிறார்
இதை உரையாடலை வீடியோவாக எடுத்து ,பணத்தை அபேஸ் செய்ய அந்த போலீஸ்காரரின் வைப்பாட்டி முடிவெடுக்கிறார்.
இதற்காக மேற்கொண்டு கலந்தாலோசிக்க ,காபி ஷாப்பில் அவளும் ,அவளின் இரு நண்பர்களும் கூடி ,வீடியோ விஷயத்தை பேசுகிறார்கள்.இதைப்  பார்த்துவிட்ட ,ஒரு கல்லூரி மாணவன்
அந்த வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு போய், தனியாக ஒரு மொபைல் மூலம் போலீஸ்காரனை மிரட்டுகிறான் .


உடனே பதறிய அந்த நான்கு போலீஸ்காரர்களும், வீடியோ எடுத்த போலீஸ்காரரின் வைப்பாட்டியை தூக்கில் தொங்க விடுகிறார்கள் 
.இந்த தூக்கு விவகாரத்தை ,மற்றொரு காவல்துறை பெண் அதிகாரி விசாரிக்க வருகிறார். 
விசாரணை முடிவதற்குள் ,அந்த வீடியோ ஆதாரத்தை அழிக்கவேண்டும் என்பதால் ,நான்கு போலீஸ்காரர்களும் 
கல்லூரி வளாகத்தில் விசாரிக்கிறார்கள் ,அப்படி விசாரித்துக்கொண்டு இருக்கும்போதுதான் ,கதையின் ஹீரோ அருள்நிதி ரூம் வாசலில்  ,ஒரு பேக் கிடைக்கிறது.இதைப் பார்த்துவிட்ட 
போலீஸ்காரர்கள் ,பேக்கில் வீடியோகேமரா  இருப்பதைக்கண்டு ,அருள்நிதிதான் நம்மை மிரட்டியவன் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
அருள்நிதியையும் ,ஏற்கனவே விசயம் தெரிந்த ,வைப்பாட்டியின் இரு நண்பர்களையும் சுட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்கள் .இதில் அருள்நிதி ஒருவழியாக தப்பிக்கிறான் .
அந்த நேரத்தில் தப்பித்தாலும் ,மீண்டும் அந்த போலீஸ்காரர்கள் அருள்நிதிக்கு விஷயம் தெரிந்துவிட்டதே என எண்ணி 
அவனை ,மனவளர்ச்சி குன்றியவன் போல சித்தரிக்கிறார்கள் .அதில் இருந்து அருள்நிதி தப்பித்தானா ?
 அந்த பெண் காவல்துறை அதிகாரி ,விசாரனையின் என்ன கண்டுபிடித்தார் ? கார் விபத்தில் கிடந்த பணம் யாருடையது என்பதை , சில பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

கதையில் ,கிளைக்கதையான அருள்நிதி _இனியா காதல் ,குடும்ப உறுப்பினர்களின் அறிமுகக் காட்சிகள் ,கல்லூரியில் ஏற்படும் மாணவர்கள் சண்டை ,இவையெல்லாம்  ,கதையின் வேகத்திற்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும் ,படத்தின் நீளத்தை இழுக்க  பயன்படுகிறது. .அருள்நிதிக்கு ,சொல்லிகொள்ளும் அளவுக்கு நடிப்புத்திறமை
இல்லாவிட்டாலும் ,கதைக்கு நன்றாகவே பொருந்துகிறார். ஒரு 
பரபரப்பான சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு  ,மவுனகுரு கண்டிப்பாக நல்ல சாய்ஸ்தான் ..

3 comments:

  1. எப்படி எல்லா படங்களையும் சிறப்பாக உங்களால் எழுத முடிகிறது.??
    கச்சிதமான விமர்சனம்..ஆனால், படத்தை பார்க்கும் வகையில் எழுதப்பட்டிருப்பது நன்று.
    நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  2. குமரன் அவர்களே தங்கள் நேரத்தை ஒதுக்கி ,கமன்ட் செய்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. சிறியதாக ஒரு நல்ல விமர்சனம். மிகவும் நன்றி.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்