Loading

Friday, March 30, 2012

மின் கட்டண உயர்வு -ஒரு கடுப்பு பார்வை


இதோ ,அதோ என இழுத்தடித்து ,மீண்டும் ஒரு விலை ஏற்றத்தை மக்கள் தலையில் இறக்கி வைத்து விட்டது .காரியம் முடிஞ்ச பின்ன ,கைவிடுறது ,காதலனோட பழக்கம் மட்டுமில்லை ,கழக அரசோட 
பழக்கமும் அதுதான்னு தெளிவாக உணர்த்திவிட்டது ,இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு .

கடந்த ஆதிமுக ஆட்சியில்  ,அரசு ஊழியர்கள் மீது பாய்ந்த  அம்பு ,இந்த முறை சாமன்ய மக்களின் 
மீது பாய்ந்திருக்கிறது. இதுதான் நிர்வாகத் திறன் என்று ,எந்த மடையன் அல்லது மடையச்சி சொன்னான்(ள்) என தெரியவில்லை . இருக்கும் விலைவாசியே ,மக்களுக்கு சொல்லொண்ணாத் துயரை தருகையில் ,மீண்டும் மக்களை வதைக்க வந்திருக்கிறது இந்த உயர்வு .

இந்த கட்டண உயர்வுக்கு ,ஒரு சமாளிப்பு வேறு சொல்லியிருக்கிறார்கள் .நூறு யூனிட்டுக்கு மேல்
உபயோகிப்பவர்களுக்கு மட்டும்தான் கட்டணம் உயற்றப்படுமென .இந்த சப்பைக்கட்டு எல்லாம் 
திமுக ஆட்சியிலையே நாங்கள் பழகிவிட்டோம் .
பேருந்துகளை தினுசாக விட்டு ,விலையை ஏற்றியது போல் ,நீங்கள் எந்த மாதிரியான கோல்மால் 
செய்வீர்கள் என மக்களுக்குத் தெரியாதா ?
ஊழல் புரிந்த பணத்தில் ,கால்வாசியை கஜானாவிற்கு திருப்பி விட்டாலே போதுமே ,இந்த விலை ஏற்றத்தை தவிர்த்து விடலாமே .


சரி விலையை ஏற்றி விட்டாச்சு ,நீங்கள் ஏற்றிய மின்கட்டண அறிவிப்பு இங்க இருக்கு ,மின்சாரம் எங்கேன்னு மக்கள் கேட்டா ,என்ன பதில் சொல்வீங்க ? பொழுது விடியுறதும் மின்'வெட்டுல,பொழுது அனையுறதும் மின்வெட்டுல. இந்த லட்ச்சனத்துல வக்கணையா ஒரு அறிவிப்பு .
உங்களுடைய ஆட்சி ,என்ன மாதிரியான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என தெள்ளத் தெளிவாக சொல்கிறது  . வெற்றி தந்த போதை ,அதிகாரம் கிடைத்ததால் வந்த  ஆணவம் 
உங்களின் ஒவ்வொரு  நடவடிக்கைகளிலும் தெரிகிறது .

உங்களின் கட்டண உயர்வு அறிவிப்பு -அண்ணா நாமத்தை சுலபமாக வாழவிட்டு   விடாது .


No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்