Loading

Monday, June 20, 2016

கவிதா VS இனிதா



கவிதா vs இனிதா !



கவிதா என்னிடம் ஒரு வாரமாக பேசவில்லை ....
ஒரு மணிநேரம் பேசாவிட்டாலும் கூட ,அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்
கவிதா ,என்னிடம் பேசவில்லை
என்பதை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

கவிதாவிடம் எனக்குப் பிடித்ததே ,அவளின் கண்கள்தான் .நான் புவி ஈர்ப்பு விசையை ,ஒழுங்காக படித்தேனோ இல்லையோ ,
கவிதாவின் விழி ஈர்ப்பு விசையை எளிமையாக புரிந்துகொண்டேன் .கவிதாவினுடனான என் காதல் ,வரும் ஏப்ரல் மாதத்துடன்
மூன்று வருடம் ஆகப்போகிறது.இப்படிப்பட்ட நேரத்தில்தான் ,கவிதா என்னுடன் பேசவில்லை.

கவிதாவுக்காக் ,நான் வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களை விட ,
எனக்காக அவள் வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களே அதிகம்..
பிரியத்துடன் என் தோல் மேல் சாய்ந்துகொள்வதும்,
 'போடா' "வாடா" என செல்லச்சண்டை
இட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள் .

சரி கவிதா ஏன் உன்னுடன்  பேசவில்லை என்று நீங்கள் கேட்பது  புரிகிறது ?
கேள்வி கேட்பது ஈசி ,பதில் சொல்வதுதான் ரொம்ப கஷ்டம் என்று கமல்ஹாசன் சொன்னதுதான் நியாபகத்திற்கு வருகிறது.
கவிதா ஏன் பேசவில்லை என்பது ,எனக்கே தெரியாத போது ,நான் எப்படி உங்களுக்கு பதில் சொல்ல முடியும்.
இருந்தாலும் பரவாயில்லை ,ஒரு வாரமாக இல்லாத மூளையை கசக்கி பிழிந்ததில்,
இனிதாவிடம் இதை கேட்டுவிடலாம் என்று தோன்றியது .

இனிதா ??????
ஆம் ,கவிதாவின் அழகுத்தங்கைதான் இந்த இனிதா .
அளவான உயரம்,
அளவான தேகம் ,
அளவில்லாத அழகு, என அத்தனை
அம்சமும் கொண்ட இனிதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் .
பிரம்மன் படைத்திருக்க வேண்டிய படைப்பை ,
பாழாய்ப்போன குப்புசாமி (கவிதா ,இனிதாவின் தந்தை ) படைத்தது ஒன்றுதான்
என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை .

சரி விசயத்துக்கு வருவோம் ,இனிதாவிடம் கவிதாவைப் பற்றி கேட்டேன் ..

நான் : கவிதாவுக்கு என்னாச்சு ?ஏன் உம்முனு இருக்கா ?

இனிதா : எனக்கும் அதுதான் வருத்தமாயிருக்கு ரவி ,
          நம்ம காதலை ,கவிதாகிட்ட சொன்னதுல இருந்தே ,யார்கிட்டயும் பேசமாட்றா ,நீதான் அவளை சமாதானப்படுத்தனும் ..


நான் : அடிப்பாவி ,அவகிட்ட ஏண்டி சொன்ன ??????????????????

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்