Loading

Wednesday, January 25, 2017

மெரினா சர்வாதிகாரங்கள் !!!

எச்சரிக்கை :
இது யாரையும் புண்படுத்தாத நோக்கில் புனையபட்ட செயற்கை கதை அல்ல,
அனைவரையும் புண்படுத்தும் உண்மைக் கதை
கதை 1 :
சரவணன் BE முடித்திருக்கிறான்.
தென்மாவட்டத்தில் பிறந்து ,கஷ்டப்பட்டு படித்து சென்னையின் மேன்ஷனில் தற்போது வசித்து வருகிறான்.
சில மாதம் முன்புதான் தன் நீண்ட நாள் கனவான ,இருசக்கர வாகனொமொன்றை (பல்சர் 220)ஆசை ஆசையாக வாங்கினான்.
இன்று இண்டெர்வீவ் அட்ண்டெண்ட் செய்வதற்காக தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.கம்பெனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்ற சந்தோசத்துடன் வெளியே வந்து பார்த்த போது,சரவணனின் வாகனம் சுக்குநூறாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
வாகனத்தை விட மிக மோசமாக நொறுங்கிப்போகிறான் சரவணன்.
கதை 2
ரோட்டோரமாக பெட்டிக்கடை நடத்தும் பெருமாள் ஒரு சிறு வியாபாரி .பிளாட்பாரத்தில் கடை நடத்தி பிழைத்து வந்த
பெருமாளுக்கு ,ஒரே பிரச்சினை, மழை பெய்தால் கடை நடத்தமுடியாது.இதற்காகவே நீண்டநாள் திட்டமிட்டு அக்கம்பக்கம் கடன் வாங்கி,
நாலு பிளைவுட் கட்டைகளை ,கார்பெண்டர்களை வைத்து அடித்து,சிறிய பெட்டியாக்கி
அதில் மிட்டாய்களை வைத்து , அவனுட்குட்பட்ட வர்க்கத்தில் கொஞ்சம் பெருமையாக கடை நடத்தி வந்தார்.
அன்றும் வழக்கம்போல்,குளித்து முடித்து,தன் அன்றைய வாழ்ந்திருத்தலுக்காக பெட்டிக்கடையை திறக்க வந்தார்.
பெட்டிக்கடை இருந்த சுவடில்லாமல் போயிருந்தது.வாழ்தலை பற்றிய பயத்துடன் பெருமாள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்.
கதை 3
மைக்கேலுக்கு எப்போதும் வீடு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆறு மாததிற்கு ஒருமுறை வாடகை கட்டுபடியாகமல் ,குடும்பத்துடன் வேறு வீடு தேடி அலைவது வாடிக்கையான கஷ்ட அனுபவத்தை தந்திருக்கிறது.
தனக்காக இல்லாவிட்டாலும்,தன் பிள்ளைகளுக்காக ,நிரந்தர?இருப்பை
தேடித்தர எண்ணி,ஏதாவது ஒரு இடத்தில்
குடிசையை போட்டு விட முடிவெடுத்து,
ஆறு மாதத்திற்கு முன் ,
ரோட்டோர ,தின வட்டி வசூல்காரனிடம்
வட்டிக்கு காசு வாங்கி,குடிசை அமைத்து, பிள்ளைகளுக்காக தற்காலிக பாதுகாப்பை உறுதிப்படுத்தி தந்திருந்தான்.அன்றைய தினம்
மீன்பாடு வேலைக்கு போய்விட்டு திரும்பி வந்து ,ஏரியாவில்.நுழைந்தபோது.தன் மொத்த உழைப்பான குடிசையும் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து மைக்கேல் மயங்கிக்கொண்டிருந்தான்.
கதை 4
இடம் :மெரினா கடற்கரை.
இரண்டு போலிஸ்காரனின் உரையாடல்.
யோவ் மேலிடத்துல இருந்து தகவல் வந்திருக்கு,இன்னிக்கு செம வேட்டை காத்திருக்கு .
என்ன சொல்றீங்க ஏட்டையா?
போராட்டப் பசங்களை தடியடி நடத்தி கலைக்க சொல்லி ஆர்டர் வந்திருச்சு .
பசங்கள பார்த்தா பாவமா இருக்கு ஏட்டையா ?பேசி அனுப்பி வைக்கலாம்ல
அப்படி செஞ்சா..மிஞ்சுவானுங்கையா..
அப்படியே பேச்சுவார்த்தை நடத்தி இன்னிக்கு கலைஞ்சு போய்ட்டாலும்,நாளைக்கு வேறொரு பெரிய பிரச்சினைக்கு ,இன்னும் வீரியமா வருவானுங்க .
சரி நமக்கெதுக்கு வம்பு,
நீ போய் ,அந்தா பைக்கா தெரிது பாரு ,அதுல லத்திய வச்சு உடைக்க ஆரம்பி,
நான் குப்பத்து பக்கமா போய் தீ வச்சு ,
கடைங்களை நொறுக்கி
மேலிடம் சொன்ன கடமையை ஆத்துறேன்.
நீ பயப்படாத ,
இடைல எதிர்த்து கேக்குற எல்லாத்தையும் நமம் போலிஸ் செட்டு பார்த்துக்கும்.

2 comments:

  1. நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. காவல் துறையின் அட்டகாசங்கள் கற்பனையாக தெரிவதெல்லாம் ஆச்சர்யம் தான்

      Delete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்