Loading

Sunday, January 29, 2017

வர்லாம் வர்லாம் வா (திரைப்பட விமர்சனம் )

நேற்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.மிக அட்டாகசமான கதைக் களம்.முறையற்ற ,அங்கீகாரமில்லாத 
மருத்துவ கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள்,அதனால் பாதிக்கப்படும் மாணவர்களென சிறப்பாக சென்றுகொண்டிருந்தது .உலக சினிமாக்களில் கூட இக்கதைக்களத்தை 
ஆவனமாக கொண்டுசெல்லுமளவு சிறப்பாகவே எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் என்ன பிரச்சினை என்றால்,
இடை இடையே கதைக்கு சம்பந்தமே இல்லாத  ஒருவன் வருகிறான்.
நான் மோதுனா தாங்கமாட்ட....
சுண்டு விரல்ல தொட்டுப்பார்ரா...
தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்கு 
அல்லு அதிகம்னு ,சம்பந்தமே இல்லாமல் 
கிறுக்கத்தனமா கத்திட்டு போறான்.

பிறகு திடிரென கதைக்கு வருகிறார்கள்,
கொஞ்ச நேரம் கழித்து ,அதே கிறுக்கு பையன் வந்து ,
குத்தாட்டம் போடுறான்,

நாலு பேரை அடிக்குறான்.
யார் இவண்?
ஒரு சமூக பிரச்சினை கதைக்கு இவ்ளோ இடைஞ்சல் பன்றான்.
முதல்ல அவனை தள்ளிப் போங்க சொல்லுப்பா என கத்தவேண்டும் போல இருந்தது.
.

வசதிகளே இல்லாத தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 
இன்னும் நிறைய இருக்கின்றன.அதை ஆவணப்படுத்தும் படத்தில்,
கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவனை ஏன் படத்தில் வைத்தார்களென தெரியவில்லை.கதையின் வில்லனான கசாப்பு கடை கல்வி வள்ளல் கதாப்பாத்திரத்தை விட ,எனக்கு இந்த நபர்தான் கதையை சொல்லவிடாத வில்லனாக தெரிந்தான்

அந்த நபர் வரும் சீன்களை எல்லாம் வெட்டியெடுத்தாலே போதும்,
இந்த திரைப்படம் உலக சினிமாக்களில் கூட திரையிட தகுதியுள்ள படமாக அமைந்திருக்கும் என்பது ,என் கருத்தாக மட்டுமில்லை,
சினிமா ஆர்வலர்களின் கருத்தாகவும்  இருக்கிறது.

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்