Loading

Tuesday, February 21, 2017

சிங்கம் 3 - ஒரு சமூக பார்வை !

சமீபத்தில் சிங்கம் திரைப்படத்தை பார்த்தேன் .அதில் துரைசிங்கம் என்கிற பிரதான போலிஸ் கேரக்டர் ,நாயகியிடம் , "பொம்பளப்புள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாதென "  சொல்லிவிட்டு செல்கிறார்.

ஏதோ போலிஸ் ஸ்டேஷனில் பெண் காவலர்களே இல்லாத நாடு போல,
பெண்கள் காவல்துறையிலோ ,காவல்நிலையத்திற்கோ வருவது தவறான செயல் என்கிற தொனியில் வைக்கப்பட்ட காட்சி போல இருக்கிறது.
இவர் சொல்வதுபடி பார்த்தால்,
பெண் காவலர்களை எல்லாம்,
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியதான் 
நிக்கவச்சிருக்காங்களா ?
எந்த அடிப்படை சமூக அறிவே இல்லாமல்,எப்படி இந்த துரைசிங்கம்,
போலிஸ் உயர் அதிகாரியாக ஆனான் என்பதே சந்தேகமாக உள்ளது.
நாட்டுல மகளிர் காவல் நிலையம்லாம் இருக்குதுங்கிற விசயம் இந்த பக்கிக்கு தெரியுமா தெரியாதா ?

பெண்களின் பாதுகாப்பு கருதி சொல்லப்பட்ட வசனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட,
போலிஸ் ஸ்டேஷனுக்கு பெண் சென்றால்,பாதுகாப்பில்லாத சூழ்நிலையில்தான் காவல்துறை செயல்படுகிறது என்பதை இந்த துரைசிங்கம் ஒப்புக்கொள்கிறானா?
அப்படியென்றால் காவல்துறை காவாளிகளை களைவதை விட்டுவிட்டு,
ஊர் பிரச்சினையை தீர்க்க வீராப்பாக 
கிளம்புவதெல்லாம் காமெடியாக தெரியவில்லையா ?
இதுபோன்ற குணநலன் கொண்ட சொறிநாய்களால்தான் ,டிஎஸ்பி விஷ்னுப்பிரியா மன உளைச்சலாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகளாவது தெரியுமா ?தெரியாதா ?

முதல்ல பல்லை கடிச்சிட்டு பேசுறதுக்கு பதிலா,
ஏதாவது பயனுள்ளதா பேசு நாயே !

2 comments:

  1. நாகரீகமா எழுதுயா நாயே.

    ReplyDelete
  2. நாகரீகமா எழுதுயா நாயே.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்