Loading

Saturday, June 24, 2017

கடவுள் புத்தகம் !!!

நான் வசிக்கும் தெருவில்,
ஒரு கடவுள் சிலை இருக்கிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த  சிலையில்,
நான்கு கைகள் இருந்தன.
ஒரு கையில் சூலாயுதமும்,
இன்னொரு கையில் பறவையும்,
இன்னொரு கையில் பழங்கள் போலவும்,
மற்றொரு கையில் ஒரு புத்தகத்தையும் வைத்திருந்தார்கள்.

தெருவை கடந்து செல்லும் போதெல்லாம்,
அந்த கடவுள் சிலையின்,
புத்தகம் வைத்திருந்த கையை மட்டும், பார்த்துவிடுவது வழக்கம்.
அப்படி என்னதான் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தில் ,என நீண்ட நாளாக ஆர்வம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு,
"எல்லாம் கடவுள் கையில் இருக்கு " என அடிக்கடி சொல்லுகிறாரே.
ஒருவேளை  இந்த கடவுள் சிலையின் கையில் இருக்கும் புத்தகத்தில் ,ரஜினி குறித்து ஏதேனும் எழுதியிருக்குமோ என்கிற யோசனையும் எனக்குள் வந்துபோனது.

பத்த்தாத குறைக்கு ,
பக்கத்து தெரு கோபால் %&%%%ங்கார் கூட,எங்கள் வீட்டிற்கு வந்து,அவா அவாவுக்கு என்ன கொடுப்பினையோ,
எல்லாம் அந்த பகவான் முன்னமே எழுதி வச்சிருப்பானு ,
வினோத பாஷையில் விளம்பி வைத்ததும்.என் காதில் விழுந்து தொலைத்திருந்தது.

இனிமேலும் பார்த்துக்கொண்டே இருப்பது வேஸ்ட்,
இன்னிக்கு அந்த புத்தகத்தை
லவட்டிட வேண்டியதுதான் என்கிற முடிவோடு ,நடுராத்திரியில் ஆள் அரவமில்லாத நேரத்தில்,
கருப்பு போர்வை போர்த்திக்கொண்டு ,அந்த சிலைப்பக்கம் நடந்தேன்.

இந்த கோபால் &%&%காரரையும்,
அந்த ரஜினியை பற்றியும் ,
புத்தகத்தில் கண்டிப்பாக ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்று,மைண்ட் வாய்ஸ்சுடன் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே ,கடவுள் சிலையை நெருங்கினேன்.
அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்தேன்.யாருமில்லை.
எதிரே நிற்கும்
கடவுளும் என்னை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இருந்தாலும் சின்னதாக பயம் தொற்றிக்கொண்டிருந்ததை,
"பகு பகு பாகுபலியென்கிற" மந்திரத்தை,
முனங்கி ,பயத்துக்கே பயம் காட்டி ஓடவைத்துவிட்டு  ,ஒருவழியாய்
கடவுள் சிலையின் நான்காம் கையிலிருந்த புத்தகத்தை இரவல் ?வாங்கிக்கொண்டு,திடு திடுவென வீட்டை நோக்கி ஓடினேன்.

கடவுள் புத்தகம் கைக்கு வந்துவிட்டதால்,
அத்தனை பேரின் தலையெழுத்தும்,
என் கையில் இருப்பது போன்ற ,பிரம்மை எனக்குள் சில நொடிகள் வந்துபோனது.
வீட்டிற்குள் நுழைந்தவுடனே,
கையிலிருந்த கடவுள் புத்தகத்தை ,
மிகப்பெறும் ஆவலுடன் திறந்து பார்த்தேன்.


"இன்னுமாடா என்னையும்,
அவனுங்களையும் இந்த உலகம் நம்புது ?
என எழுதப்பட்டிருந்தது !!
x

Saturday, June 17, 2017

சிம்பு முளைத்திருக்கிறான் !!!

மிக இயல்பான அவளை..
தற்செயலாகதான் சந்தித்தேன்.
அதென்ன மிக இயல்பான அவளென  நீங்கள் கேட்டால்,
சொல்ல ஏராளமிருக்கிறது.
ஆகவே..
நா(மா)ட்டு பிரச்சினையிலிருந்து சற்றே விடுபட்டு..
என் கதைக்கு வாருங்கள்.

அதிகாலையில் 5மணிக்கு
எழுந்து ,கோலம் போட்டு,
செல்பி ஸ்டேட்டஸ் போடுபவர்களுக்கு மத்தியில்,
இவள் 4.30மணிக்கே எழுந்து,
வாக்கிங்...டான்ஸ் கிளாஸ்,டிரைவிங் கிளாஸ்,ஃப்ளூட் கிளாஸ் முடித்துவிட்டு,
குல்பி ஐஸ்  சப்பிக்கொண்டு,
வீடு வந்து சேரும்போதே,
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என மணிவன்னன் சொல்வது போல ஆச்சர்யம் காட்டுகிறாள்.


பேஸ்புக்கில் பல பெண்களைப் போல,
பூ ..மரம் ,செடி போட்டோக்கள்
அப்லோட் செய்து ,
ஹவ் கியூட் பிரெண்டஸ் .என..
அட்டகாசம் செய்யாமல்,

எனக்கெல்லாம் நீங்க லைக் பண்ண்னுவீங்களா பிரெண்ட்ஸ் என
அலும்பு பண்ணாமல்,
சில்லி பிரைட் ரைஸ்..
யும்மி..யம்மியென அழிச்சாட்டியம் செய்யாமல்,
ஐன்ஸ்டீனையும்,ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சையும் ,கார்ல் மார்க்ஸ்சையும்,
எளிமையாக புரியும்படி எழுதிக்கொண்டிருந்தாள்.


ஞாயிற்றுக்கிழமை ஆனால், ஏசுவின் மகிமையென பல கும்பல் கிளம்பிக்கொண்டிருக்க,
இவளோ இயல்பாய் லைப்ரெரி சென்று அறிவியலின் மகிமையை படித்துக்கொண்டிருப்பாள்.

கோவிலுக்குள்ளே செல்லும்போது ,ஓம் நமோ நாரயணா என எல்லாரும் விளம்பிக்கொண்டே நுழைந்தால்,
இவள் மட்டும் பெரியாருக்கு நன்றியென கூறிவிட்டு கோவிலினுள் நுழைகிறாள்.

தியேட்டரில் எல்லாரும் பாகுபலி பெர்பார்மன்ஸ்சை உற்று நோக்கினால்,
இவள் மட்டும் பாகுபலிக்கு பின்னால் நிற்கும் சைட் ஆர்ட்டிஸ்டின் ஆக்டிங்கை உற்று நோக்குகிறாள்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பெண்கள்,
தெய்வ மகள் சீரியல் பார்க்கும் நேரத்தில்,இவள் வீட்டில் மட்டும் கேம் ஆப்  த்ரோன்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.
மற்ற வீடுகளில் பாளையத்து அம்மன் படம் ஓடினால்,இவள் வீட்டில் பராசக்தி ஓடிக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் பிரெஞ்ச் மொழி கற்கிறாள்,
இன்னொரு நாள் ஜெர்மன் மொழி படிப்பாள்.
அப்போ ஹிந்தி மொழியென எந்த பக்தாஸ்சாவது,ஆர்வமாக கேட்க முன்வந்தால்,அவளின் இன்னொரு செருப்பில் விரிசல் விழும் ஆபத்திருக்கிறது.அதனால் வாயை மூடி படிக்கவும்.

ரேஷன் கடையில்,
பெண் என்றும் பாராமல்,கியுவில் நிற்கவைத்துவிட்டார்களே என,
டெம்ப்ளேட்டாய் புலம்பாமல்,
ஆண் என்றும் பாராமல்,கியுவில் நிற்கவைத்துவிட்டார்களே என எனக்கு சப்போர்ட்டாய் வழிவிடுவாள்.

வேலையென வந்துவிட்டால்,
தூங்குமூஞ்சி தீபாத்தனமாக இல்லாமல்,
தூக்கி போட்டு பந்தாடும் "தங்கல்" பட,கீதாத்தனமாக காரியத்தை முடிக்கிறாள் .


அவ்வளவு ஏன்..
நூறு பேர் கலந்து கொண்ட இண்டெர்வியுவில்,
இன்றைய தமிழக முதல்வர் யார்.என்ற கேள்வி கேட்கப்பட்டதில்,
99பேரும் எடப்பாடி பழனிச்சாமியென ,
தவறான பதிலை சொல்ல,
இவள் மட்டும் வெங்கையா நாயுடு என
சரியான பதிலை சொல்லி,
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தாள்.


இவ்வளவு ஆற்றல் கொண்ட அவளுக்கு,
திருஷ்டிப் பொட்டாய்,ஒரு சிறு அளவு ஜெனிலியாத்தனம் இருந்ததை இன்றுதான் அறிந்துகொண்டேன்.
சாலையில் எதேச்சையாக எதிரெதிரே சந்தித்தபோது,தவறுதலாய் நேருக்கு நேராக முட்டிக்கொண்டோம்.

ஐயோ சாரிங்க...
தெரியாம பட்டுருச்சு..
ஆனா பொய்தீகப்படி ,மூனு வாட்டி முட்டாம போனா,
கொம்பு முளைச்சிடும்ங்க..
அதனால ப்ளீஸ் என..
இரெண்டொருமுறை மீண்டும்,
தலையில், முட்டிவிட்டு சென்றாள்.

அவள் சொன்னது உண்மைதான் போல,
இப்போது கொம்பு முளைக்கவில்லை,
ஆனால் ,அதற்கு மாறாக எனக்குள் ,
சிம்பு முளைத்திருக்கிறான் !!!
x

பிரபலமான பதிவுகள்