Loading

Saturday, June 24, 2017

கடவுள் புத்தகம் !!!

நான் வசிக்கும் தெருவில்,
ஒரு கடவுள் சிலை இருக்கிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த  சிலையில்,
நான்கு கைகள் இருந்தன.
ஒரு கையில் சூலாயுதமும்,
இன்னொரு கையில் பறவையும்,
இன்னொரு கையில் பழங்கள் போலவும்,
மற்றொரு கையில் ஒரு புத்தகத்தையும் வைத்திருந்தார்கள்.

தெருவை கடந்து செல்லும் போதெல்லாம்,
அந்த கடவுள் சிலையின்,
புத்தகம் வைத்திருந்த கையை மட்டும், பார்த்துவிடுவது வழக்கம்.
அப்படி என்னதான் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தில் ,என நீண்ட நாளாக ஆர்வம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு,
"எல்லாம் கடவுள் கையில் இருக்கு " என அடிக்கடி சொல்லுகிறாரே.
ஒருவேளை  இந்த கடவுள் சிலையின் கையில் இருக்கும் புத்தகத்தில் ,ரஜினி குறித்து ஏதேனும் எழுதியிருக்குமோ என்கிற யோசனையும் எனக்குள் வந்துபோனது.

பத்த்தாத குறைக்கு ,
பக்கத்து தெரு கோபால் %&%%%ங்கார் கூட,எங்கள் வீட்டிற்கு வந்து,அவா அவாவுக்கு என்ன கொடுப்பினையோ,
எல்லாம் அந்த பகவான் முன்னமே எழுதி வச்சிருப்பானு ,
வினோத பாஷையில் விளம்பி வைத்ததும்.என் காதில் விழுந்து தொலைத்திருந்தது.

இனிமேலும் பார்த்துக்கொண்டே இருப்பது வேஸ்ட்,
இன்னிக்கு அந்த புத்தகத்தை
லவட்டிட வேண்டியதுதான் என்கிற முடிவோடு ,நடுராத்திரியில் ஆள் அரவமில்லாத நேரத்தில்,
கருப்பு போர்வை போர்த்திக்கொண்டு ,அந்த சிலைப்பக்கம் நடந்தேன்.

இந்த கோபால் &%&%காரரையும்,
அந்த ரஜினியை பற்றியும் ,
புத்தகத்தில் கண்டிப்பாக ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்று,மைண்ட் வாய்ஸ்சுடன் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே ,கடவுள் சிலையை நெருங்கினேன்.
அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்தேன்.யாருமில்லை.
எதிரே நிற்கும்
கடவுளும் என்னை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இருந்தாலும் சின்னதாக பயம் தொற்றிக்கொண்டிருந்ததை,
"பகு பகு பாகுபலியென்கிற" மந்திரத்தை,
முனங்கி ,பயத்துக்கே பயம் காட்டி ஓடவைத்துவிட்டு  ,ஒருவழியாய்
கடவுள் சிலையின் நான்காம் கையிலிருந்த புத்தகத்தை இரவல் ?வாங்கிக்கொண்டு,திடு திடுவென வீட்டை நோக்கி ஓடினேன்.

கடவுள் புத்தகம் கைக்கு வந்துவிட்டதால்,
அத்தனை பேரின் தலையெழுத்தும்,
என் கையில் இருப்பது போன்ற ,பிரம்மை எனக்குள் சில நொடிகள் வந்துபோனது.
வீட்டிற்குள் நுழைந்தவுடனே,
கையிலிருந்த கடவுள் புத்தகத்தை ,
மிகப்பெறும் ஆவலுடன் திறந்து பார்த்தேன்.


"இன்னுமாடா என்னையும்,
அவனுங்களையும் இந்த உலகம் நம்புது ?
என எழுதப்பட்டிருந்தது !!
x

1 comment:

  1. "இன்னுமாடா என்னையும்,
    அவனுங்களையும் இந்த உலகம் நம்புது ?

    மிக சரியான கேள்வி.

    பகிர்வுக்கு நன்றி ரவி சங்கர்.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்